Friday, December 16, 2011

அப்பாவின் திரட்டுகளிலிருந்து.... சிந்திக்கும் வேளையில்: பெண்கள் - முரண்படும் பெற்றோர்கள்

எங்கட அப்பா சிறந்த வாசிப்பாளர். வீட்டிலிருக்கும் போது அநேகமாக ஏதாவது வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்ததெதுவும் எவ்வளவு பழசென்றாலும் எறியவே மாட்டார். அவருக்குப் பிடித்த பல கட்டுரைகளை பத்திரிகைகளிலிருந்தோ புத்தகங்களிலிருந்தோ நகல் எடுத்தும் சேகரித்து வைத்திருந்தார். அவ்வாறான கட்டுரைகளில் அம்மா இன்று கண்டெடுத்து எனக்குக் காட்டிய ஒரு கட்டுரை கீழ்வருவது. இது புரட்டாதி 28, 1993 இல் சென்னையில் வெளியான தினமணிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இதில் சொல்லியிருக்கும் பல‌ கருத்துகள் இக்காலகட்டத்திற்கும் மிகவும் பொருந்தும் என்பதாலும் அப்பாவின் திரட்டுகளில் சிலதையாவது இங்கு சேமிக்கலாம் என்ற நோக்கிலும் இங்கு பகிர்கின்றேன்.

இக்கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் கதைக்கும் ஓரளவு மனமுதிர்ச்சி அடைந்த‌ பெற்றோர்கள் இன்னும் மிகக் குறைந்தளவே எம் சமூகத்தில் உள்ளார்கள். அவ்விதத்தில் இக்காலகட்டத்திலும் ஒரு சிறுபான்மையினரையே இக்கட்டுரை address பண்ணுகிறது. Nevertheless, it's an optimistic view.

Monday, December 12, 2011

அது ஒரு பெண்குழந்தை - உலகின் மூன்று மிக ஆபத்தான சொற்கள் - A documentary



~2.29 நிமிடங்களில் ஒரு தமிழ்ப் பெண் சொல்வது:

"மனசில அத வைச்சிருக்கக் கூடாது. பையனா இருந்த வச்சிருக்கலாம். பெண்ணா இருந்த ஒழிச்சுப் போடலாம். பிறந்த உடனே நானே புதைச்சுப்புடுவேன். அப்புறம் பையனே இல்லையெனு எட்டு குழந்தைகளாட்டம் கொன்னுப்புட்டோம்."
 
It’s a Girl! Documentary Film
A Blog by the 50 million missing campaign

Wednesday, December 7, 2011

மாதவிடாய்ச் சுழற்சி

இப்பதிவில் மாதவிடாய்ச் சுழற்சியில் ஒவ்வொரு மாதமும் என்ன நடக்கிறதெனப் பார்ப்போம். கீழுள்ள படம் பார்க்க மிகச் கூடுதலான, சிக்கலான தகவல்களைக் கொண்டுள்ளதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் விளங்குவதற்கு மிக மிகச் சுலபமானது. As people say, looks can be deceiving. அதனால் தயவு செய்து படத்தைப் பார்த்து விட்டு பதிவை வாசிக்காமல் போகவேண்டாம். :) இயலுமானவரை இலகுவாக்க முயற்சித்துள்ளேன்.Please let me know if I have completely failed at it.

Sunday, December 4, 2011

பெண்ணின் இனப்பெருக்கத்தொகுதி - மாதாமாதம் என்னதான் நடக்குதங்கே என‌ப் பார்க்க‌லாமா?

எம்மவர்களிடையே மாதவிடாய் தொடர்பாக, கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக நிறையக் கட்டுக்கதைகள் உண்டு. இக்கதைகளில் ஏதாவது உண்மை இருக்கிறதா எனப் பெரிதாக யாரும் யோசிப்பதில்லை. எவனோ சொன்னான் என எல்லோரும் அவற்றையே பின்வற்றுவதே அநேகம் நடந்து வருகிறது. அண்மையில் கருத்தடை மாத்திரைகள் பற்றி கேள்விப்பட்ட கருத்துகளே என்னை பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியைப் பற்றிய இந்த அடிப்படை அறிவியல் தொடரை எழுதத் தூண்டியது. எம்மிளையவர்கள் பலருக்குக் கருத்தடை மாத்திரைகளைப் பற்றிய தகவல்கள் தெரியாது. ஊரிலிருந்து பெரியவர்கள் பலருக்குச் சொல்வது "அந்த மாத்திரைகள் நஞ்சு மாதிரி. கருப்பையை எரிச்சுப் போடும். பிறகு ஒரு பூச்சி, புழுவும் உருவாகாது' என்பதே. இந்த மாதிரிக் கட்டுக்கதைகளுடன், மாதவிடாய் இரத்தத்திற்குக் கூட‌ மாயாஜாலத் தீய சக்திகள் உண்டு என அர்த்தப்படும் கட்டுக்கதைகளுக்கு உதாரணமாக‌ அண்மையில் என் கண்ணில் பட்ட இந்தப் பயங்கரமும் கூட நான் இதை எழுதுவதற்குக் காரணங்கள்.

Although எவர்களின் சிந்தனையைத் தூண்ட வேண்டுமென நினைக்கிறேனோ, அவர்களில் சிலராவது இப்பதிவை வாசிப்பார்களா என்பது சந்தேகமே. எனினும் யாராவது இருசிலருக்காவது உதவலாம் எனும் நம்பிக்கையிலும், எனது சிந்தனைகளை ஒருமைப்படுத்தும் முகமாகவும் இத்தொடரை எழுதுகின்றேன். நேரில் என்னிடம் இதைப்பற்றிக் கதைப்பவர்களிடம் என்னால் இயன்றளவு விளக்கிக்கொண்டு வருகின்றேன்.

சரி. முதலில் பெண்களின் இனப் பெருக்கத் தொகுதியின் உட்கூறுகளின் அமைப்பியலைப் (anatomy) பார்ப்போமா?

Saturday, November 26, 2011

Sometimes Words Do Speak Louder Than Actions



ஆண்களே - be part of the solution - ஒரு போதும் பெண்களுக்கெதிராக வன்முறை செய்யவோ, அவ்வாறான வன்முறையை மன்னிக்கவோ அல்லது பார்த்தும் பார்க்காத மாதிரிப் போகவோ மாட்டேனென உறுதி கூறுங்கள்.  Do swear to never commit, excuse or remain silent about violence against women. உங்களை ஒருவர் எப்படி நடத்தவேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே பெண்கள் உட்பட எல்லோரோடும் பழகுங்கள்.

Friday, November 25, 2011

பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறைகளை ஒழிப்போம் - It's White Ribbon Day to end the Violence Towards Women


பெண்களுக்கெதிரான வன்முறை பல சமூகங்களில் மிகப் பரவலாக நடக்கும் பிரச்சனை. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண்கள் அவர்கள் பெண்களாக இருப்பதால் மட்டும் வன்முறைக்குட்படுத்தப்படுகிறார்கள். உலகில் 15 க்கும் 44 வயதிற்கும் உட்பட்ட பெண்களில் போர், புற்றுநோய்/மலேரியா போன்ற நோய்கள், விபத்துகள் ஆகிய காரணங்களால் மொத்தமாக இறந்த பெண்களை விட அவர்களுக்கெதிரான வன்முறையால் இறந்தவர்களே மிக அதிகம். மிக அடிப்படையான மனித உரிமை மீறல் இது.
எமது சமூகத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கை, பெண்களே தமக்குத் தாமே இவ்வன்முறைகளை வரவழைத்துக் கொள்கிறார்கள் என்பதே. குற்றம் இழைத்தவன விட்டு விட்டு பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாக்குவது எந்தவிதத்திலும் நியாயமானதல்ல. Nobody ever asks or deserves to be abused this way. போர்ச்சூழலில் பெண்களுக்கெதிராக நடத்தப்படும் வன்முறைகளை விட‌, பாலியல் வன்புணர்வு உட்பட அநேகமான வன்முறைகள் பெண்களின் கணவனாலேயோ அல்லது அவளுக்குத் தெரிந்த வேறொரு ஆணாலேயே நடத்தப்படுகிறது.
வீடுகளில் நடக்கும் வன்முறைகள் எமது சமூகத்தில் கலாச்சாரத்தின் பெயரில் இன்னும் கூடுதலாக மூடி மறைக்கப்படுகிறது. எத்தனையோ பேர் இன்னும் இதை சாதாரணமாக வீடுகளில் நடக்கும் விடயமாகவே கருதுகின்றனர். அநேகமாக வன்முறைக்குட்படும் பெண்கள் வெளியில் யாருக்கும் தெரியாமல் மெளனமாகவே அவதிப்படுகின்றனர். பல சமயங்களில் நிலமை படு மோசமாகப் போய் காவல் துறையின் மூலமே women refuge க்கு அனுப்பப்படுகின்றனர். அதன் பின் கூட அவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பாமல் வைத்திருப்பது மிகக் கடினம். பெண்களின் ஒரே இலட்சியம் திருமணம் முடிப்பதும் என்ன நடந்தாலும் சாகும் வரையும் அப்பந்தத்தை விட்டு விலகாமல் இருப்பதுவுமே என்று பிறந்ததிலிருந்து ஓதி வளர்க்கப்படும் சமூகத்தில் இது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. இவ்வன்முறை நடக்கும் வீடுகளில் வாழும் குழந்தைகளும் இதனால் மிகவும் மனநிலை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலும் அவர்களும் இவ்வன்முறைகளுக்குட்படுத்தப்படுகிறார்கள்.
Overwhelmingly இம்மாதிரியான வன்முறைகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அதனால் இந்த white ribbon day ஆண்களின் அடிப்படைச் சிந்தனையில் மாற்ற‌த்தைக் கொண்டுவருவதற்காகவே உருவாக்கப்பட்டது. ஒரு சமூகமாக ஒவ்வொருவரும் இவ்வன்முறைக்கு எதிராக எழுந்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்.

Saturday, November 12, 2011

தனிச்சலுகையின் நோயியல் - The Pathology of Privilege

Tim Wise is brilliant here. அவர் இந்த உரையில் குறிப்பிடுவது வெள்ளை இனத்தவராக இருப்பதனால் மட்டும் ஒருவருக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி. இதில் சொல்லப்படும் அநேகமான கருத்துகள் ஆண்களாக இருப்பதால் மட்டும், சமூகத்தால் உயர் சாதிகள் எனக்குறிப்பிடப்படும் கூட்டத்தில் பிறந்ததனால் மட்டும், even சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் கூட்டத்திற்குள் பிறந்ததினால் மட்டும் (male/female) ஒருவருக்குக் கிடைக்கும் தனிச்சலுகைகளுக்கும் மிகச் சரியாகப் பொருந்தும். Think about it.

Friday, November 11, 2011

ஒரு பெண்ணாக இருப்பதற்கான‌ தண்டனையை எவ்வாறு தவிர்க்கலாம் (சவுதி அரேபியாவில்)? A video by Amnesty International

Tuesday, November 8, 2011

DNA, மரபணு, நிறவுருக்கள், மரபியல் விதித்தொகுப்பு - அடிப்படை அறிவியலும் கொஞ்சம் போலி அறிவியலும்






மூன்றெழுத்து மரபியல் சொற்களைக் codons என்று கூறுவர். விளங்குவதற்கு இலகுவாக இருக்கும் என்பதற்காகவே இவற்றை சொற்கள், இவற்றின் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பைக் கொண்ட மரபணுவை ஒரு வாக்கியம் என்று கூறுகிறோம். அதற்கும் மேல் ஒரு மொழியின் கட்டமைப்பிற்கும் DNA sequences க்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை.

அண்மையில் யாரோ ரஸ்ய விஞ்ஞானிகள், மரபியல் தகவல்கள் மொழிகளின் இலக்கணவிதிகளைப் பின்பற்றுகின்றன. அதனால் மொழிகள் அனைத்தும் மரபணுக்களின் உச்சரிப்புக்களாக இருக்கின்றனவாம்  எனக் கண்டுபிடித்துள்ளார்கள் என‌ ஒரிரு இடங்களில் வாசித்தேன். அதோடு DNA க்கும் ஆன்மீகத்திற்கும் கூட எதோ தொடர்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதற்கு எந்தவித ஆதாரங்களும் இருப்பதாக‌த் தெரியவில்லை. இந்த ஆராய்ச்சியகளைச் செய்ததாகக் கூறப்படும் Pjotr Garjajev இன் பெயரிலோ, இவ்வாராய்ச்சியைப் பற்றியோ எந்தவொரு அறிவியல் பிரசுரிப்புகளையும் காண முடியவில்லை. பல ஆன்மீகத் தளங்களிலும் சில போலி மருத்துவர்களின் தளங்களிலுமே காணக்கிடைத்தது. DNA is an amazing molecule by itself. இந்த மாதிரிக் கட்டுக் கதைகள் எதுவும் தேவையில்லாமலே மரபியல் எவ்வளவோ வியக்கத்தகு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஏன் தான் ஆட்கள் இம்மாதிரிக் கற்பனைகளை உண்மை என்று உலவ விடுகிறார்களோ தெரியவில்லை.



அடுத்து மரபணு மாற்றங்களைப் பற்றியும் இம்மாற்றங்களுக்கும் பரிணாமத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் பார்க்கலாம்.

Friday, November 4, 2011

வெளிர் நீலப் புள்ளி - எமக்குத் தெரிந்த ஒரே வீடு



இது 1990 ஆம் ஆண்டில் voyager 1 எனும் விண்வெளியூர்தியால், பூமியிலிருந்து கிட்டத்தட்ட 6 பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். பரந்த அண்டவெளியில் பூமி ஒரு மிக மிகச் சிறிய புள்ளியாகவே தெரிகிறது. Vayager 1 தன் வேலையை நிறைவேற்றி விட்டு solar sytem இலிருந்து வெளிக்கிடும் போது வானியலாளர் Carl Sagan இன் வேண்டுகோளிற்கேற்ப,இப்படம் எடுக்கப்பட்டது. Carl Sagan ஒரு நல்ல வானியலாளர் மட்டுமல்ல, சிறந்த சிந்தனையாளரும் கூட. அறிவியலை மக்களுக்குக் விளக்க பல முயற்சிகள் செய்தவர். அதற்காகப் பல புத்தகங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் செய்தவர். பரந்த சிந்தனையும் எமது அறிந்தவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் நாம் இன்னும் அறிய எந்தளவு முக்கியமென்பதை நன்கறிந்தவர். இவர் தனது 62 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவரின் பிறந்த நாள் நவம்பர் 9. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 6ஆம் திகதி Carl Sagan க்கும், அறிவியலுக்கும், அறியும் ஆர்வத்திற்குமாக Carl Sagan Day கொண்டாடப்படுகிறது.
அவரது Pale Blue Dot: A Vision of the Human Future in Space என்ற 1994 புத்தகத்தில் இவ்வாறு எழுதியதே பின்வருவது.  It's amazing.




இந்த வெளிர் நீலப் புள்ளியைப் பாருங்கள். அது இங்கே. அது தான் வீடு. அது தான் நாம். அதில் தான் நாம் அன்பு செலுத்துபவர்களும், எமக்குத் தெரிந்தவர்களும், நாம் கேள்விப்பட்டவர்களும், இதுவரை வாழ்ந்த/வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் இருந்த/இருக்கும் இடம்.
 
எமது ஒட்டுமொத்த மகிழ்ச்சி, துன்பம், ஆயிரக்கணக்கான முனைப்பான மதங்கள்,சித்தாந்தங்கள், வர்த்தகக் கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும்;
இதுவரைக்கும் வாழ்ந்த/ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு வேட்டைக்காரனுக்கும் ஒவ்வொரு உணவு தேடுபவனுக்கும்;
ஒவ்வொரு கதாநாயகனுக்கும்; ஒவ்வொரு வில்லனுக்கும்; ஒவ்வொரு பண்பாடு/கலாச்சாரத்தை ஆக்கியோருக்கும் அழித்தோருக்கும், ஒவ்வொரு அரசனுக்கும்; ஒவ்வொரு விவசாயிக்கும்; ஒவ்வொரு சோடி இளம் காதலர்களுக்கும்; ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும்; ஒவ்வொரு நம்பிக்கையளிக்கும் குழந்தைக்கும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளருக்கும்; தேச ஆராய்ச்சியாளருக்கும்; ஒவ்வொரு போதிக்கும் ஆசிரியருக்கும்; ஒவ்வொரு ஊழல் செய்யும் அரசியல்வாதிக்கும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாருக்கும்; ஒவ்வொரு உயர்ந்த தலைவருக்கும்;ஒவ்வொரு மதகுருவுக்கும்; ஒவ்வொரு பாவிக்கும்  இதுவே வீடு.

சூரியக் கீற்றால் தொங்கிகொண்டிருக்கும் ஒரு தூசுத் துகளே எம் வீடு. மிகப் பரந்த அண்டத்தில் பூமி ஒரு மிக மிக‌ச் சிறிய மேடையே. இந்தச் சிறு புள்ளியின் ஒரு சிறு கூற்றை கணப்பொழுது ஆழ்வதற்காக பல படைத்தலைவர்களாலும் சக்கரவர்த்திகளாலும் சிந்தப்பட்ட இரத்த ஆறுகளைப் பற்றிச் சிந்தியுங்கள். இப்புள்ளியின் ஒரு மூலையில் வாழும் குடிகளுக்கு அவர்களில் இருந்து பிரித்தரியமுடியாத மற்றொரு மூலையில் உள்ள குடிகளால் நடத்தப்படும் முடிவில்லாத கொடூரங்களை, அவர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படும் விளக்கமின்மையை, ஒருவரை ஒருவர் கொல்வதற்கு அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை, அவர்களுக்குள் சுடர் விட்டெரியும் வெறுப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். எமது நிலை, கற்பனையேயான எமது சுய முக்கியத்துவம், இந்தப் பிரபஞ்சத்தில் எமக்கு சிறப்புரிமை இருக்கென்னும் மாயை, இவை அனைத்தையும் இந்த வெளிரிய நீலப் புள்ளி கேள்விக்குள்ளாக்குகிறது. எமது கோள், சூழ்ந்திருக்கும் அபாரமான அண்டவெளி இருட்டில் இருக்கும் ஒரு தனிமையான சிறு துகள். எமது தெளிவற்ற நிலையில், எம்மிடம் இருந்து எம்மைக் காப்பாற்ற, இந்த அண்ட வெளியில் எங்காவதிருந்து எமக்கு உதவி வருமென்பதற்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதுவரைக்கும் எமக்குத் தெரிந்தமட்டில் பூமியில் மட்டுமே உயிர்கள் விருத்தியாகியுள்ளன. அண்மையில் எம்மால் வேறொரு இடத்திலும் சென்று வாழ முடியாது. வேறிடங்களுக்குப் நிச்சயமாகப் போய்வரலாம், ஆனால் நிரந்தரமாக வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இன்னும் இல்லை. விருப்பமோ இல்லையோ பூமியை மட்டுமே எம்மால் இப்போதைக்கு ஆழ முடியும்.  எம்மில் அடக்கமான பண்பை விருத்தியாக்கும் பயிற்சியாக‌ வானியல் இருக்குமெனச் சொல்லப்படும்.  மனிதரின் மடைத்தனமான இறுமாப்பைப் பறைசாற்ற தொலைவிலிருந்து தெரியும் எமது உலகத்தின் இந்த உருவத்தைப் போல் வேறெதுவும் இருக்கமுடியாது. இந்த உருவம் எனக்கு, நாம் ஒவ்வொருவரையும் அன்பாக நடத்தவும், எமக்குத் தெரிந்த ஒரே வீடான இந்த வெளிர் நீலப் புள்ளியை பேணிப் பாதுகாக்கவுமான எமது பொறுப்பை வலியுறுத்துகிறது. இதுவே எமக்குத் தெரிந்த ஒரே வீடு.

Tuesday, November 1, 2011

what’s science up to?

இந்த விடயத்தில் அமெரிக்கர்களுக்கும் (குறிப்பாக republicans) எம்மவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லவே இல்லை. :(


எல்லா உயிர்களினதும் பொது மொழி - DNA - ஒரு அறிமுகம்

பரிணாமத்தில் அடுத்த பகுதியாக‌ மரபணுக்களையும் மரபணு மாற்றங்களையும் பற்றி பார்க்குமுன் அவற்றைப்பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருப்பது முக்கியம். பல தடவை DNA என்றால் என்ன? அதன் கட்டமைப்பு எப்படி இருக்கும்? என்றெல்லாம் எழுதத்தொடங்கி, பின் நான் எழுதியது ஏதோ பள்ளிப் பாடப் புத்தகத்தில் வாசிப்பது போன்று இருந்ததாலும், அது ஒரு சுவாரசியமான வாசிப்பாக வாசிப்பவரின் மனதில் பதியும் போல் எனக்குத் தோன்றாததாலும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இந்த அடிப்படைத் தகவல்களை இலகுவாகவும் அதே நேரம் பாடம் படிப்பது போலல்லாமலும் இருக்க வேண்டுமென நினைத்தேன். அண்மையில் ஒரு you tube video பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தமிழில் காணொளியாகச் செய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. நானாக images எல்லாம் வடிவமைக்க நேரம் இப்போ நிச்சயமாக இல்லை (might give it a go during my maternity leave :)). பல இடங்களில் நல்ல படியாக மரபியலின் அடிப்படையை விளக்கும், கிட்டத்தட்ட நான் எழுத நினைப்பதைச் சொல்லும் காணொளிகளைத் தேடிக்கொண்டிருந்த்தேன். அந்தத் தேடலில் கிடைத்த‌ University of California, Riverside இலிருந்து செய்யும் திட்டம் பிடித்திருந்தது. அவர்களின் காணொளிகளையே நான் மொழிமாற்றம் செய்து இங்கு போடலாமா என அவர்களிடம் அனுமதி கேட்ட போது, மிகவும் பெருந்தன்மையுடன், தாராளமாகச் செய் என்றுவிட்டார்கள். அவர்களின் கடின உழைப்பால் உருவான காணொளிகளில் சொல்லப்படும் செய்திகளை மட்டுமே தமிழில் மாற்றியுள்ளேன். இந்த முயற்சியில் ஏதாவது பயன் இருக்கிறதா/ இதையும் விட நன்றாகச் செய்யலாமா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

மக்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு அடிப்படையான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். அண்மையில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில்சொல்லப்படும் மிகப் பிழையான அறிவியல் விளக்கங்களை மக்கள் உண்மை என எடுத்துக் கொள்வதைப் பார்த்தபின் (முகுந்த் அம்மாவும் தெகாவும் அழகாகச் சொல்லியுள்ளார்கள்), இந்த அடிப்படை அறிவு மிகவும் அவசியம் என நம்புகின்றேன்.


P.S. இப்போ இங்கு இலைதுளிர் காலமாதலால் எனக்கு சரியான hayfever. அதற்கு சாதாரணமாக antihistamine உம் steroid sparay உம் எடுத்தாலே எனக்கு வேலை செய்யும். கர்ப்ப காலத்தில் steroid spray எடுப்பது நல்லதில்லை என்பதால், I pretty much have a blocked noce 24/7. :( அதனால் இதற்கு ஒலிவடிவம் கொடுத்தது என் துணைவன். I know the quality of the recording can be improved a lot and we are working on it. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் ஒரிரு காணொளிகளை ஏற்றுகிறேன்.

Wednesday, October 19, 2011

மேடைப் பயமும் நானும்


ஆய்வு செய்ய மிகப் பிடிக்கும் என்று போன பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஆனால் அதையே தொழிலாக எடுக்க முடிவு செய்தால் ஆய்வுகூடத்திலேயே இருந்துவிட முடியாதென (I would rather do that), முனைவர் பட்டத்திற்கான ஆய்வைத் தொடங்கிய சிறிது காலத்தில் தெரிந்து கொண்டேன். ஆய்வைப் பற்றி அது தொடர்பான கருத்தரங்குகளிலும் வேறு இடங்களிலும் பேசுவதும் ஆய்வு செய்யுமளவு செய்யவேண்டும். அது எனக்கு மிக மிகப் பிரச்சனையான விடயம். எனக்கு மிகத் தீவிரமான மேடைப் பயம் இருந்தது/ இப்பவும் ஓரளவு இருக்கிறது.

இந்தப் பதிவில் மேடைப் பேச்சில் எனது அனுபவங்களை, நான் செய்த/ எனக்கு ஏற்பட்ட embrasing moments ஜப்பற்றி பிறகு எப்பவாவது பார்க்கலாம் என்றிருந்தேன். இப்போ தொழில் தொடர்பான பதிவுகளை எழுதிய பின் அதைப்ற்றியும் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். இதைக் கூட நான் புலம் பெயர்ந்த பலரிடம் சொன்னதுண்டு. சிலருக்கு மிக அழகாகப் பொது இடங்களில் பேச வரும். ஆனால் எல்லோருக்கும் இயற்கையிலேயே அழகிய பேசும் திறன் அமைவதில்லை. சிலருக்கு பேசும் தகவல்கள் தெரியாவிடினும் என்ன கதைக்கிறோமெனத் தெரியாமலே மிகுந்த நம்பிக்கையுடன் கதைப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.

இங்கு வந்த புதிதில் புது இடம், புது மனிதர்கள், புதுக் கலாச்சாரம் போன்றவைகளால் தோன்றும் anxiety உடன் எனது ஆங்கிலப் புலமையில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து கொண்டது. ஒருமுறை எனது கடைசித் தங்கை இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது அவர்கல் வகுப்பிலிருந்து adventure camping சென்றார்கள். அப்போ பெற்றோர் இயலுமானால் guides ஆக வரும் படி கேடிருந்தார்கள். அப்பா guide ஆக என்னைப் போகச்சொன்னார். காலைக் கட்டித் தண்ணியில் விட்ட மாதிரி இருந்தது. போனது 11-12 வயது சிறுவர்களுடன். அவர்களுக்கு golf, அம்பு வில்லு விளையாட உதவுவது என்று பல வேலைகள். பிரச்சனை என்ன என்றால் நான் ஒருநாளும் golf விளையாடின‌தும் இல்லை/ எப்படி விளையாடுவதென்று தெரியவும் தெரியாது. சிறுவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாரி ஏதோ உதவி செய்து முடித்து கடை நாள் இரவு, சிறுவர்களுக்காக ஆசிரியர்களும் பெற்றோரும் ஒரு show வைப்பதென்று தலைம ஆசிரியர் சொன்னார் (எங்கையிருந்துதான் இந்த மாதிரி idea எல்லாம் எடுத்தார்களோ தெரியாது). என்னை எதற்கும் கூப்பிடக் கூடாது கடவுளே என்று வேண்டாத தெய்வமில்லை. :) அதனால் ஒரு பயனும் வரவில்லை. எனது part மேடையில் ஏறி அதில் வைத்திருந்த ஒரு பாத்திரத்திலிருந்ததை ஒரு கோப்பையில் ஊற்றிக் குடிப்பது மாதிரி நடித்துவிட்டு "This is a nice cup of Milo" என்று சொல்வது மட்டும் தான். அரங்கிலிருந்தோர் 11-12 வயதுச் சிறுவர்கள். அதைச் சொல்லும் போதும் கூடக் குரல் நடுங்கியது. இதெல்லாம் சும்மா எவருடனும் இருந்து கதைக்கும் போதல்ல ஒரு கூட்டத்திற்கு முன்னால் நிற்கும் போதே.

பல்கலைக் கழகத்தில் முதலிரு வருடங்களில் வகுப்புகளில் பெரிதாக பேச்சு assessments இருக்கவில்லை. மூன்றாம் நான்காம் ஆண்டுகளிலேயே ஒரு பிரசுரிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை மீளாய்வு செய்து வகுப்பிற்குச் சொல்வது, அல்லது கற்பித்த ஒரு பாடத்தைப் பற்றிப் பேசுவது என assessments இருந்தது. I hated giving seminars. ஆனால் அது assessment இன் ஒரு பகுதி எனில் செய்து தானே ஆக வேண்டும். பல சமயம் வகுப்பிற்கு முன் நின்று பேசும் போது குரல் மிக நடுங்கும். எனக்கே நான் என்ன கதைக்கின்றேன் என விளங்கவில்லை சில சமயங்களில். என்ன தான் முதலில் பல தடவை பேசிப் பார்ப்பினும், எழுந்து வகுப்பின் முன் நின்றதும் மூளை முழுதும் வெறுமையாகப் போன மாதிரி ஒரு உணர்வு. இந்நாட்டில் உள்ள ஓரு நன்மை, நீ ஒன்றுக்கும் உதவாது, நீ எல்லாம் படிப்பதே waste என்று ஒரு போதும் சொல்ல மாட்டினம். நீ செய்ததில் எது நல்லது என்று சொல்லி அதற்கும் பாராட்டி, எவற்றில் முன்னேற வேண்டும் என்றும் சொல்வதால், நீங்கள் முற்றாகத் தோல்வியடைந்த்ததாக ஒரு போதும் நினைக்க மாட்டீர்கள். :)

பின் முனைவர் பட்டப் படிப்பைத் தொடங்கியதும் ஒரு வருடத்திற்குள்ளேயே, எனது ஆராய்ச்சியின் முடிவுகள் சரிவரத் தெரிய முன்னர், எனது முதலாவது பேச்சு ஒரு மகளிர் நோய் மருத்துவர்களின் (gynaecologists) கூட்டத்தில். I was completely overwhelmed and intimidated. பேச்சின் போது குரல் நடுங்கினும் ஏதோ கதைத்து, அந்தளவு nervous ஆக இருந்ததற்கு, இடையில் மன்னிப்புக் கூடக் கேட்டேன். பேச்சு முடிந்ததும் எனது மேற்பார்வையாளர், "பரவாயில்லாமல் செய்தாய் (that was a lie :)), ஆனால் இவ்வளவு நல்ல முடிவுகளை வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆட்களிடம் மன்னிப்புக் கேட்காதே" என்று சொன்னார். :)

பல தடவை பேச சந்தர்ப்பங்கள் கிடைத்ததால் (not out of choice but out of obligation, really :)) குரல் நடுங்குவது ஓரளவுக்கு நின்று விட்டது. ஆனால் பதற்றம் நின்ற பாடில்லை. இன்னொரு இனப்பெருக்க ஆய்வுக்கான கருத்தரங்கில் எனது ஆய்வைப் பற்றிய பேச்சை முடித்து கேட்ட கேள்விகளுக்கும் விடையளித்தபின் அரங்கிலிருந்தோர் கைதட்ட, எனது கைகளும் தானாகவே தட்டத் தொடங்கின. தட்டும் கைகளைப் பார்த்துக் கொண்டே, அதிர்ச்சியில், மூளையின் ஒரு பகுதி நிப்பாட்டு, நிப்பாட்டெனவும் கைகள் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. Yeap. I was a complete nutcase.

இத்தனைக்கும் இது முடியாதென்பதால் ஆய்வையே விட்டு விடலாமா என ஒரு போதும் யோசித்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.

அதோடு பயத்தை எதிர்கொள்வதே அதைப் போக்குவதற்கான சிறந்த வழி என்பதற்கிணங்க பலமுறை முயற்சிக்கக் கிடைத்த வாய்ப்புகளால் என்னை அறியாமலே முன்னேறத் தொடங்கினேன் என நினைக்கிறேன். இக்காலகட்டத்தில், ஒரு முறை பகுதி நேர telemarketing வேலை ஒன்றிற்கான நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். அதில் Group interview உம் இருந்தது. நேர்காணலில் ஒரு பகுதியில் வந்தவர்களை சிறு கூட்டங்களாகப் பிரித்து விட்டு, ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கற்பனைப் பொருளைக் கூறி, ஒரு 10 நிமிடத்தில் அதற்கான விளம்பரம் ஒன்றை எல்லோரும் ஒன்றுபட்டு எழுதி, அக்கூட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு பங்கேற்று கதைத்தும் நடித்தும் காட்ட வேண்டும். இதயம் பட படவென்று அந்த நடித்துக் கதைத்தலின் போது அடித்த போதும், செய்தேன். அவ்வேலைக்குத் தெரிவும் செய்யப்பட்டேன். அந்நேரம் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை. எதோ பெரிதாகச் சாதித்து விட்டதாக உணர்ந்தேன். வேலை கிடைத்துவிட்டது என்பதை விட, என்னால் எல்லோர் முன்னிலும் நின்று அந்த விளம்பரத்தை கதைத்து நடிக்க முடிந்ததும் and that they thought it was good enough to hire me made me so happy.

கடைசி இரண்டு ஆண்டுகளும் நடந்த post graduate student symposium களிலும் எனது ஆய்வைப் பற்றிய பேச்சுக்கு பல பரிசுகள் கூடக் கிடைத்துள்ளன. நான் முதலில் இருந்த நிலையிலிருந்து பார்த்தால் it is an amazing improvement. ஆனால் இப்போதும் எங்காவது பேச வெண்டுமெனில் முதல் நாள் நித்திரையே வராது. அத்தோடு பேசி முடிக்கும் வரை சாப்பாடு தண்ணி எதுவும் ஏறாது.

இதை என் வயதில் இங்கு புலம் பெயர்ந்து வந்து படிக்கும் போதும் நேர்காணலின் போதும் பயப்படும் பலரிடம் சொல்லியுள்ளேன். If I can do this, anybody can.

Tuesday, October 18, 2011

It's a boy! :)

Monday, October 17, 2011

Bring on the learning revolution!

திரு பாஸ்க‌ர் போன‌ ப‌திவில் கூறிய‌ க‌ருத்து,
"உங்கள் நிலைதான் எல்லோருக்கும். அது இன்றும் தொடர்வது கொடுமை. அதுவும் என்ன எனக்கு பிடிக்கும் என்று சிந்திப்பதை விட எது எனக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்பதே மாணவர்கள் தனது துறையை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. அதுவே உணர்ந்து படித்தலில் இருந்து வெகு தூரம் பயணம் செய்ய துவங்கும் புள்ளியாகவும் உள்ளது. இவை எல்லாம் வெறும் போதிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து தீர்க்கும் பிரச்னை அல்ல அது சமூக மாற்றத்தின் பகுதியாக மட்டுமே செய்ய கூடிய ஒன்று. உங்கள் அனுபவங்களோடு நமது சமூகத்தின் பெரும்பாலான மாணவர்களின் நிலையோடு இணைத்து பிரச்சனையை இனம் கண்டு எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்."

உங்க‌ள் க‌ருத்திற்கு மிக்க‌ ந‌ன்றி. போதிக்கும் முறையும் ஆசிரிய‌ர்-மாண‌வ‌ர் relationship உம் நிச்ச‌ய‌மாக‌ மாற்ற‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை. ஆனால், "இவை எல்லாம் வெறும் போதிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து தீர்க்கும் பிரச்னை அல்ல அது சமூக மாற்றத்தின் பகுதியாக மட்டுமே செய்ய கூடிய ஒன்று" என்ற உங்கள் கருத்தை முழுதாக ஆமோதிக்கின்றேன். நிச்சயமாக சமூக மாற்றத்தினூடாகவே மாற்ற முடியும்.

பின்வருவது சமூகத்தில் மாற வேண்டியவை என நான் நினைப்பவை. இன்னும் பல இருக்கும். இப்போதைக்கு எனக்குத் தோன்றியவை இவையே. These are just my thoughts, hence may not be a coherent post.

Societal norms have to be changed completely.

முதலில் எல்லாத் துறைகளையும் வேலைகளையும் சமமாக மதிக்கும் தன்மை வர வேண்டும். சமூகத்தில் எல்லோரும் மருத்துவர்களாகவும் பொறியியளாளர்களாகவும் இருந்தால் மற்றைய வேலைகளை யார் செய்வதாம். இவர்கள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு எல்லாத் துறைகளும் முக்கியமே. எனது A/L வகுப்பிலேயே சில மாணவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அறிவியல் படிக்க கொஞ்சம் கூட விருப்பமில்லை. சிலருக்கு வர்த்தகம் மிகவும் பிடித்திருந்தது. சிலருக்கு arts பிடித்திருந்தது. பெற்றோரின் கட்டாயத்தால் மட்டுமே அவர்கள் அறிவியல் வகுப்புகளில் இருந்தார்கள். பாடங்களில் விருப்பம் இருந்தாலே கிரகிக்க மிகவும் கடினமான பாடத்திட்ட முறையைக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் எப்படிப் படிப்பது? It's really sad to see many young people completely loose their love for learning because of our societal norms and education systems.

இராண்டாவது எல்லோரும் சமூகம் ஆமோதிக்கும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. பட்டதாரிகளாக இருந்தால் தான் அவர்களுக்குத் திறமை இருக்கிறது என்ற எண்ணம் மாற வேண்டும். எல்லாப் பிள்ளைகளுக்கும் பல்கலைக் கழகத்திற்குச் சென்று பட்டதாரியாகவேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர்களுக்கு இயலுமானளவு இருக்கும் தெரிவுகளுக்கான தகவல்களைக் கொடுத்து அவர்களையே தெரிவு செய்ய விட வேண்டும். Everyone doesn't have to be an academic, if they trully do not want to be. என் துணைவர் சொல்வார், எமது சமூகத்தில் பலர் திருமணத் தகைமைத் திரட்டில் போடுவதற்காகவே பட்டம் எடுக்கிறார்கள் என்று.

மூன்றாவது பெற்றோர் தமது வாழ்க்கையைப் பிள்ளைகளினூடாக வாழ்ந்து விட வேண்டுமென்ற எண்ணம் முழுதாக மாற வேண்டும். எனக்கு இன்னாராக வர விருப்பவிருந்தது, அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என் பிள்ளையை எப்படியாவது வர வைத்து விட வேண்டுமென்பது பிழையான சிந்தனை. It puts way too much pressure on the kids. அவர்களுக்கு இயலுமானளவு வேறுபட்ட அனுபவங்களை வழங்கி, பின் அவர்களுக்கு என்ன செய்ய விருப்பம் என்பதை அவர்களின் தெரிவுக்கே விட்டு விட வேண்டும். Parents should guide the kids and let them live their own life and respect the variety of talents of each individual. பிள்ளைகளின் தனித்துவத்தன்மையை மதிக்கப் பழக வேண்டும்.

எமது சமூகத்தில் பேப்பர் தகுதிகளுக்கு மதிப்பு மிக அதிகம். எமது சமூகத்தில் அது பல நேரங்களில் எதுவும் விளங்காமல் மனனம் செய்து கூடப் பெறலாம். அதனால் ஒருவருக்கு எவ்வளவு அறிவு வருகிறதென்பது வாதாடக் கூடியது. அனுபவத்தால் பெறப்படும் அறிவிற்கு மதிப்பளிப்பதில்லை. Well, generally knowledge is not respected anyway. That has to change.

இதில் உருப்படியாக என்னவாவது சொல்லியிருக்கிறேனா எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துகளை நிச்சயம் தெரிவியுங்கள். நான் Creativity expert Sir Ken Robinson இன் கருத்துகளுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். These two videos are well worth watching. இதை தமிழாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.



Saturday, October 15, 2011

நான் ஒரு விஞ்ஞானி - 2

போன பதிவில் எழுதிய கேள்வி பதில்களோடு இங்கு நான் meet the scientist நிகழ்ச்சியில் பங்கு பற்றும் போது அநேகமான சிறுவர்கள் கேட்கும் இன்னொரு கேள்விக்கும் விரிவான பதில் எழுதலாமோ என்று நினைத்து பின் மிகவும் அலட்டுரனோ தெரியாதென விட்டு விட்டேன். ஆனால் அதில் திரு. பாஸ்கரின் கருத்து எழுதத்தூண்டியதால் எழுதுகிறேன். மிகுந்த அலட்டலே என நினைத்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

"எப்ப/எவ்வாறு உங்களுக்கு ஆய்வுதான் career என்று தெரிந்து கொண்டீர்கள்?/அத‌ற்கு என்ன‌ செய்தீர்க‌ள்?
நான் எனது பள்ளிப் படிப்பை இலங்கையில் முடித்தனான். முற்றிலும் தமிழில். அங்கு பாடத்திட்டம் மிகவும் வேறுபட்டது. 16 ஆறு வயதில் நீங்கள் எந்தத்துறைக்கு செல்லப் போகிறீர்கள் என்று முடிவு செய்ய வேண்டும். யார் இது ஒரு நல்ல திட்டம் என்று முடிவு செய்ததோ தெரியாது. எனக்கு 16 வயதில் நிச்சயமாகத் தெரியாது எனக்கு என்னவாக வர விருப்பம் என்று. அறிவியலில் விருப்பம் இருந்ததால் A/L இல் அறிவியலே எடுத்தேன். அம்மா, அப்பா நான் மருத்துவமே படிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தனர். எனக்கு என்ன விருப்பம் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்ன options இருக்கென்று கூடத் தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் ஆய்வு எனும் துறை இருக்கிறதென யாரும் விளக்கியதில்லை. அங்கு A/L science இல் மிக நல்ல புள்ளிகள் எடுத்தால் மருத்துவம் அல்லது BSc/teaching மட்டுமே செய்யலாமெனவே நான் அறிந்திருந்தேன். வேறு எதுவும் தெரியாது.
A/L எடுத்துவிட்டு நியுசிலாந்திற்குப் புலம் பெயர்ந்தபின் என்ன செய்வதென்று யோசித்து, நான் இரசாயனவியல் செய்யலாமென நினைத்திருந்தேன். ஏனெனில் எனக்கு இரசாயனவியல் நன்றாக ஓடும். ஆனால் அப்பா biomedical science செய் என்றார். அவர் சொன்னது degree முடித்ததும் இங்கு மருத்துவத் துறைக்கு apply பண்ணலாம் என்ற எண்ணத்தில். நான் எந்தவொரு தீர்மானமும் இன்றி சரி என்றேன். அந்த‌ப் ப‌டிப்பின் க‌டைசி ஆண்டில் ஆறு மாதம் ஒரு சிறிய‌ ஆய்வு project செய்ய‌ வேண்டும். அதுவே எனக்குத் தேவையான திருப்பு முனையாக அமைந்தது. அதன் போதே எனக்கு ஆய்வும் ஆய்வுகூடத்தில் வேலை செய்வதும் எந்தளவுக்குப் பிடித்திருந்தது என்று தெரிந்து கொண்டேன். அதுவரை ஓரிடத்தில் 30 நிமிடங்கள் இருந்து பாடம் படிக்கக் கொஞ்சம் கூடப் பொறுமையற்றவள் திடீரென்று நாள் முழுக்க ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் செய்தாலும் அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் மனம் ஒன்றி, enjoy பண்ணியது எனக்கே வியப்பாக இருந்தது.

அதோடு எனக்கே என்னை பற்றிக் கொஞ்சம் தெளிவும் அப்போ தான் வந்தது. நான் அதுவ‌ரை ஒரு போதும் இருந்து நெடு நேரம் ப‌டித்த‌தில்லை. இருந்து, படித்து, அதைப் பின் திரும்ப‌ப் ப‌டித்து, பாட‌மாக்கி செய்வ‌தெல்லாம் என‌க்கு கிட்ட‌த்த‌ட்ட‌ முடியாத‌ காரிய‌மாக‌வே இருந்த‌து. சமயப் பரீட்சைகளில் எப்பவும் வரும் முதல் கேள்வி, ஒரு ஜந்து தேவாரங்கள் தந்து அதில் இரண்டோ மூன்றோ தேர்ந்தெடுத்து முழுதாக எழுத வேண்டும். அதில் ஒரிரு தேவாரங்கள் எப்பவுமே அநேகமாக வரும். அதனால் அவை மட்டுமே எனக்கு முழுதாகப் பாடமாக இருந்தது. அவற்றை மட்டுமே அந்தக் கேள்விக்கு நம்பிச் சென்றிருக்கின்றேன். That's how bad I was. இந்த லட்சணத்தில் 2 1/2 வருடங்கள் படித்து இடையில் ஒரு assessment உம் இல்லாமல் அதன் கடைசியில் 100 வீத‌த்திற்குப் ப‌ரீட்சை எழுதி எப்ப‌டி ப‌ர‌வாயில்லாம‌ல் செய்தேன் என்று என‌க்குத் தெரியாது.

இங்கு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு semester உம் ஆறு மாதங்களே. அதற்குள் கூட பல assignments, tests என்று assessments இருப்பதால் கடைசிப் பரீட்சை 50-60% க்குத்தான். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் சில பாடங்கள் முழுதாக internal assessments ஆகக் கூட உண்டு. அநேக‌மாக‌ எல்லாப் பாட‌ங்க‌ளிலும் நான் க‌டைசிப் ப‌ரீட்சையில் எடுக்கும் புள்ளிக‌ளை விட‌ internal assignments இல் எடுக்கும் புள்ளிக‌ள் மிக‌க் கூடுத‌லாக‌ இருந்த‌து. ஏனெனில் க‌டைசிப் ப‌ரீட்சைக்குப் போகையில் என‌து மூளையில் ப‌திந்திருப்ப‌து அநேக‌மாக‌ வ‌குப்புக‌ளில் lecturers சொன்ன‌தே த‌விர‌, நானாக‌ப் பாட‌ப் புத்த‌க‌த்தை இருந்து ப‌டித்த‌தால் அல்ல. இங்கு கூட எனக்கு மனதிற்குப் பிடிக்காத பாடங்களை just pass பண்ணுவதற்காக மட்டும் படிப்பது எனக்கு மிகவும் கடினமான விடயம். இங்கு பாட‌சாலைக‌ளிலும் பாட‌த்திட்ட‌ம் இவ்வாறே. They concentrate more on practical aspects than theoritical aspects. Theories ஜ‌க் கூட‌ அநேக‌மாக‌ப் pracaticals இனூட‌க‌ உண‌ர‌ப்ப‌ண்ணுவ‌தால் பாட‌மாக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் மிக‌க் குறைவு. இப்பாட‌த்திட்ட‌ம் என‌து ம‌னோபாவ‌த்திற்கு மிக‌வும் சார்வாக‌ இருந்த‌து.
இதெல்லாம் யோசித்து தெளிந்த போது இன்னொன்றும் விளங்கியது. மருத்துவத்திற்கு எடுபட்டால் எனக்கு எப்படிப் படிக்க இயலாதோ அப்படிக் கட்டாயம் சில வருடங்களாவது படிக்க வேண்டும் என்று. அதே நேரம் எனக்கு உயிரியல், மருத்துவம் இரண்டும் பிடித்திருந்தது. எனக்கு வாசிக்க, யோசிக்க, பரிசோதனைகள் செய்து கேள்விகளுக்கு விடை காண மிகப் பிடித்திருந்தது. I realised that I am a hopeless passive learner but am very good at active learning, which is what research required.

அப்ப தான் எனக்கு மருத்துவத்திற்கு apply பண்ண புள்ளிகள் இருந்த போதும் எனக்கு அது வேண்டாம், நான் அதே மருத்துவ உயிரியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு apply பண்ணுவதென முடிவெடுத்தேன். I wanted to DO what medical practitioners get to read in their textbooks.

Friday, October 14, 2011

Miss Representation

படம் அமெரிக்க சமூகத்தை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பினும் அநேகமான  சமூகங்களுக்குப் மிகவும் பொருந்தக்கூடிய‌ தொப்பியே.



Miss Representation

Thursday, October 13, 2011

நோபல் சமாதானப் பரிசு 2011

இம்முறை நோபல் சமாதானப் பரிசு அற்புதமான, துணிவான, திறமையான இரு ஆபிரிக்கப் பெண் புரட்சியாளர்களுக்கும் ஒரு மத்திய கிழக்கு நாடான Yemen பெண்ணுக்கும் கிடைத்துள்ளது.

Ellen Johnson Sirleaf - Liberia வின் முதல் பெண் ஜனாதிபதி


Leymah Gbowee - மேற்கு ஆபிரிக்காவில் பெண்களின் அரசியல் சக்தியைக் கூட்டுவதற்காகப் பாடுபடுவர்.



Tawakul Karman - Yemen பெண் விடுதலைப் புரட்சியாளர்


சமூகத்தின் எல்லா நிலைகளையும் விருத்தி செய்ய, ஆண்க‌ளுக்கு ச‌மமாக‌ப் பெண்க‌ளுக்கும் வாய்ப்புகளும் செல்வாக்கும் இல்லையெனில் உலகில் மக்களாட்சியையும் நிலையான சமாதானத்தையும் உருவாக்க முடியாது.

Ellen Johnson Sirleaf ஆபிரிக்காவின் முத‌லாவ‌து ம‌க்க‌ளால் வாக்க‌ளித்து வ‌ந்த‌ பெண் ஜ‌னாதிப‌தி. ப‌த‌விக்கு வ‌ந்த‌து முத‌ல் Liberia வின் ச‌மாதான‌த்திற்கும் பொருளாதார‌, ச‌மூக‌ முன்னேற்ற‌த்திற்கும், பெண்க‌ளின் நிலையைப் ப‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கும் மிகுந்த‌ ப‌ங்க‌ளிப்பு செய்துள்ளார்.Leymah Gbowee இன‌, ம‌த‌ பாகுபாடுக‌ளையும் தாண்டி ப‌ல‌ பெண்க‌ளைத் திர‌ட்டி போரை முடிவுக்குக் கொண்டுவ‌ர‌வும் பெண்க‌ளை வாக்க‌ளிக்க‌ச் செய்ய‌வும் பாடுப‌ட்டார். பின் பெண்க‌ளின் நிலையை உய‌ர்த்த‌ப் போரின் போதும் அத‌ன் பின்னும் வேலை செய்தார்.

அரபியப் புரட்சியின் முன்னும் புரட்சியின் போதும் மிக‌க் க‌டின‌மான‌ சூழ்நிலைக‌ளிலும் பெண்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌வும் ம‌க்க‌ளாட்சிக்காக‌வும் சமாதான‌த்திற்காக‌வும் நடந்த புரட்சிகளிக்கு Tawakul Karman முன்னின்று தலைமை தாங்கினார். இப்பெண்கள் உலகின் பல நாடுகளில் உள்ள பெண்களின் ஒடுக்குமுறியை முடிவிற்குக் கொண்டுவரவும் மக்களாட்சியையும் சமாதானத்தையும் நிறுவப் பெண்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்த்தவும் உதவுவார்கள் என நோபல் பரிசு செயற்குழு நம்புகின்றது.

Wednesday, October 12, 2011

நான் ஒரு விஞ்ஞானி

விஞ்ஞானிகள்/அறிவியளாளர்கள் என நீங்கள் நினைக்கும் போதும் உங்கள் மனிதில் தோன்றும் உருவம் என்ன? உங்களுக்கு பல பிரபலமான/மிகுந்த புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளான நியூட்டன், ஃபரடே, டார்வின் மாதிரியான ஆட்கள் நினைவில் வருவார்களா அல்லது ஒரு வெள்ளை மேற்சட்டை போட்டு ஆய்வுகூடத்தில் மர்மமான வேலைகள் செய்யும் ஒருவரின் உருவம் வருமா? இம்மாதிரி உருவங்களை அடிக்கடி தொலைக்காட்சிகளிலோ வேறு தொடர்பு சாதனங்களின் மூலமோ பார்க்கும் போது இவர்கள் சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டவர்களாகத் தோன்றலாம்.வெள்ளை மேற்சட்டையை எடுத்து விட்டு அவர்களுடன் கதைத்துப் பார்த்தால் அவர்கள் எல்லோரையும் போல் சாதாரணமானவர்களே என்ற முடிவுக்கு வருவீர்கள், என இப்படத்தை எடுத்த பெளதீக‌விய‌லாள‌ர் Stephen Curry கூறுகிறார். இந்தக் குறுகிய படத்தில் அவர் ஆறு வித்தியாசமான விஞ்ஞானிகளுடன் கதைத்து, அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என அறிய முயற்சித்துள்ளார். இந்த ஆறு விஞ்ஞானிகளும் மேலை நாட்டவர்கள். எனவே சிறு வயதில் அவர்களை ஆர்வப் படுத்திய, ஊக்கமளித்த காரணங்கள் எல்லாம் எம்மவர்களின் அனுபவங்களிலிருந்து குறிப்பிட்டளவு மாறுபட்டது என நினைக்கிறேன்.அதனால் Stephen Curry அந்த ஆறு விஞ்ஞானிகளைக் கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன். இதே மாதிரி அறிவியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் அவர்களை ஊக்குவித்தது என்ன, எவ்வாறு அறிவியலை உங்கள் தொழில்துறையாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என எழுதினீர்களெனில் நன்றாக இருக்கும். அநேகமானவர்களிடம் அவர்கள் இப்போ இருக்கும் நிலைக்கு எவ்வாறு வந்தார்கள் என இது பள்ளிச் சிறுவர்களை மனிதில் கொண்டு எடுக்கப்பட்ட படம்.



இது UK இல் உருவாக்கப்பட்ட I’m a Scientist, Get me out of here என்ற‌ திட்ட‌த்தில் இருந்து உதித்த‌து. இத்திட்ட‌ம் ப‌ல்வேறுப‌ட்ட‌ விஞ்ஞானிக‌ளிட‌ம் ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் இணையத்தில் உரையாடி அவ‌ர்க‌ளைப் ப‌ர்றி அறிந்து கொள்ள‌ ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இங்கு என‌து வேலைத் த‌ள‌த்திலும் இது மாதிரி 'meet the scientist' என்றொரு திட்ட‌ம் உண்டு. பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தற்கால அறிவியல் முன்னேற்றங்களை விளக்குவதற்காகவும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படையில் அறிவியல் என்ன என்பதை விளக்குவதற்கும் உருவாக்கப்பட்டது. இதிலிருக்கும் 'meet the scientist' திட்டத்தில் மாணவர்கள் விஞ்ஞானிகளை ஒரு 15 நிமிடம் சந்தித்து அவர்களிடம் உரையாடுவார்கள். இதேமாதிரி ஒரு திட்டம் எம்மூர்களில் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்று கருதுகின்றேன். நான் எப்போதும் சொல்றனான் எமது கலாச்சாரத்தில் பிள்ளைகளின் இயற்கையான ஆர்வம், கற்பனை, சிந்திக்கும் தன்மைகளை முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது என்று. Phil Pait என்ற வானியலாளர் சொன்ன மாதிரி if you teach a man (or woman) to reason, he (or she) will think for a lifetime. மாணவ மாணவிகளுக்கு அறிவியலினூடக சிந்திக்கும் திறமைப் புகட்டினால் அது அவர்களுக்கு மட்டுமல்ல முழுச் சமூகத்திற்கும் மிக்க பயனளிக்கும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு திட்டம் ஊரில் நிறுவ விருப்பம். பார்க்கலாம்.

பின்வருவது Stephen Curry கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்கள்.

நீங்கள் அறிவியல் தொடர்பான வேலைகளிளோ ஆய்வுகளிலோ ஈடுபட்டிருக்காத வேளைகளில் என்ன செய்வீர்கள்?
  • எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் இப்ப எனக்கு புத்தகங்கள் வாசிக்க நேரம் பெரிதாகக் கிடைப்பதில்லை. வாசிக்க வேண்டுமென வாங்கி வைத்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை தான் கூடிக்கொண்டே போகுது. ஆனால் இணையத்தில் இயலுமானளவு வாசிக்கிறேன்.
  • இயலுமானளவு பிறருக்கு உதவுவது.
  • எனக்கு சமைக்கவும் மிகப் பிடிக்கும். வித விதமான சாப்பாடுகள் சமைத்துக் கொடுக்கப் பிடிக்கும். ஏழு பேர் இருக்கும் வீட்டில் வளர்ந்ததால் கொஞ்சமாக சமைக்க இப்பவும் கஸ்டப்படுவேன். அம்மா சொல்லுவா "ஏதோ கலியாண வீட்டிற்கு சமைக்கிற மாதிரி சமைப்பாள்" என்று.
  • நீண்ட‌ கார்ப் ப‌ய‌ண‌ம் நியூசிலாந்தில் செய்ய‌ப் பிடிக்கும். ஓக்லாந்த்தைத் தாண்டிய‌வுட‌ன் ஆட்க‌ள் பெரிதும் இல்லாத‌, ப‌ச்சைப் ப‌சேலென‌ புல்வெளிக‌ளும் ம‌லைக‌ளும் ம‌ட்டுமே எல்லாப் ப‌க்க‌மும் சூழ்ந்திருக்க‌ கார் க‌ண்ணாடியைத் திற‌ந்து விட்டு த‌மிழ் பாட்டும் கேட்டுக் கொண்டு கார் ஓட‌ மிக‌ மிக‌ப் பிடிக்கும்.
  • காடுக‌ளுக்குள்/ rain forests க்குள் சென்று ஒரு பாதையும் இல்லாம‌ல், எங்கு செல்கிறோமெனத் தெரியாம‌ல் கால் போன‌ போக்கில் நெடுந்தூரம் ந‌ட‌க்க‌ப் பிடிக்கும். Love Bush walking.

நீங்க‌ள் எப்போது முத‌ன் முத‌லில் அறிவிய‌லில் நாட்ட‌ம் கொண்டீர்க‌ள்?
நான் நினைக்கிறேன் முத‌ன் முத‌லில் எப்போது அறிவிய‌ல் ப‌ள்ளியில் ப‌டிக்க‌த் தொட‌ங்கினேனோ அப்போதிருந்தே என்று. ஆனால் அப்ப‌ அநேக‌மாக‌ இர‌சாய‌ன‌விய‌ல் தொட‌ர்பான‌ சிறு சிறு ப‌ரிசோத‌னைக‌ளையே ப‌ள்ளியில் செய்தோம் என‌ ஞாப‌க‌ம். ஒரு ஒன்பது வயதிருக்குமென நினைக்கிறேன், நான் வீட்டிலிருந்த‌ ஒரு அலுமாரியின் கீழ்த்த‌ட்டை என‌து ஆய்வுகூட‌மாக‌ மாற்றியிருந்தேன். :) ஆய்வுகூட‌மென்றால் பெரிசா ஒன்றும் நினைக்காதைங்கோ. ஒரு மெழுகுதிரி, சோடா போத்த‌ல் மூடியைத் த‌ட்டையாக்கி (அதில் தான் என‌க்கு விரும்பிய‌ சாமான்க‌ளைப் போட்டு சூடாக்குவ‌து) ஒரு கத்திரிக்கோல் (this was my bunsen burner :)), ஒரு பெரிதாக்கும் கண்ணாடி (magnifying glass) இந்த‌ மாதிரி வீட்டில் கிடைத்த‌துக‌ளைக் கொண்டு என‌து க‌ற்ப‌னைக் கெட்டிய‌வ‌ரை செய்த‌து. யாருக்கும் பெரிதாக‌க் காட்ட‌வில்லை. But I was absolutely proud of my lab. அப்ப அதற்கு ஆய்வுகூடம் தான் பெயரென்று கூட எனக்குத் தெரியாது. நல்ல காலம் வீடு எரிந்து சாம்பலாகவில்லை.:) நீல CuSO4 ஜ வெப்பமாக்கும் போது நீரெல்ல்லாம் ஆவியாக வேள்ளையாக மாறுவது பார்க்க மிகவும் பிடிக்கும். பொருட்களை வெப்பமாக்கினால் என்னவாகும் (உருகுமா, ஆவியாகுமா, நிறம் மாறுமா) என செய்து பார்க்கப் பிடிக்கும். அப்ப‌ எம்மிட‌ம் தொலைக்காட்சியெல்லாம் இருக்க‌வில்லை. அத‌னால் புத்த‌க‌த்தில் ப‌டிப்ப‌தில் என‌க்குப் பிடித்த‌தை/ செய்யேலுமான‌தை வீட்டில் செய்ய‌ப் பிடித்திருந்தது.இர‌சாய‌ன‌விய‌ல் மிக‌வும் பிடித்திருந்த‌து. ஆனால் விஞ்ஞானி என்றெல்லாம் ஒரு வேலை இருக்கென்றே தெரியாது.

உங்களுக்கு nobel prize கிடைத்திருக்கிற‌தா?
:) :) இல்லை.

அறிவிய‌ல் செய்வ‌த‌ற்கு ஒருவ‌ர் மிகுந்த‌ புத்திசாலியாக‌ இருக்க‌ வேண்டும‌ல்ல‌வா?
நான் மிகுந்த‌ புத்திசாலியென‌ ஒருநாளும் நினைத்த‌தில்லை. உண‌ர்ந்த‌தும் இல்லை. அநேக‌மான‌ வேளைக‌ளில் என்னை முட்டாளாக‌வே நினைத்துள்ளேன். என‌க்கு Albert Einstein சொன்ன இரு quotes மிகவும் பிடிக்கும்.
"I have no special talent. I am only passionately curious."
எனக்கு விசேடமான திறமைகள் எதுவும் இல்லை. ஆனால் நான் அறிய மிகுந்த ஆர்வமுடையவன்.
"It's not that I'm so smart, it's just that I stay with problems longer."
நான் புத்திசாலிய‌ல்ல‌, ஆனால் நான் பிர‌ச்ச‌னைக‌ளுட‌ன் நிறைய‌ நேர‌ம் செல‌வ‌ழிப்பேன். அதாவ‌து ஒரு கேள்விக்கான‌ விடையை அறியும‌ட்டும் (அது எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் ச‌ரி) விட‌மாட்டேன்.

இத‌ற்கு ஒரு உதார‌ணம்.நான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தது அவுஸ்ரேலியாவில். எனது முதல் பரிசோதனைக்குத் தேவையான tissues எல்லாம் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால். அங்கு போன முதல் ஆறு மாதத்திலேயே முதல் பரிசோதனை முழுதாகச் செய்து நிறைய முடிவுகள் எடுத்திருந்தேன். நான் பாவித்தது அப்போது ஓரளவிற்கு புதிய தொழில் நுட்பம். அந்த முடிவுகளை எப்படி ஆராய்வது/அதன் பொருள் என்ன என எனது ஆய்வுகூடத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.முதல் ஆறு மாதத்தில் எடுத்த முடிவுகளை ஆராய்ந்து விளக்க‌ எனக்கு அடுத்த ஒன்றரை வருடங்கள் பிடித்தன. முதலில் கவலைப்பட்டு, என்னால் செய்ய முடியாது, என்ன இது எதுவுமே தெரியவில்லை எனப் பல தடவை புலம்பிய‌தும் உண்டு. நான் அங்கு த‌னிய‌வே இருந்தேன். என‌து மேற்பார்வையாளர் ஒரு முறை என்னைப் பார்த்து க‌வ‌லைப்ப‌ட்டு இருத்தி வைத்து, எப்படி அறிவியல் ஒரு roller coster ride எனவும், அநேகமானவற்றைப் புரிய பல காலம் எடுக்கும் எனவும், எப்படி நாம் யாரும் ஒருபோதும் கேட்டிராத கேள்விகளைக் கேட்கும் போது அதன் விடை யாருக்கும் தெரியாது ஆனால் அதில் நேரடியாக எவரொருவர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறாரோ அவருக்கே மற்றவர்களைவிட கூடுதல் அறிவு அதில் இருக்கும் எனவும் விளக்கினார். அதன் பின் பலதடவை யோசித்தேன். அந்த முடிவுகளை ஆராயத் தேவையான மென்பொருள் எமது departmental laptop இல் மட்டுமே இருந்தது. அதனால் பலமுறை பின்னேரங்களில் வீடு செல்லும் போது lap top ஜயும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து பல இரவுகள் யோசித்து, ஆராய்ந்து இறுதியில் ஒரு நாள் அதிகாலை 2 மணியளவில் எனது ஆராய்ச்சிக்குப் பதில் (எனது மூளையில் light bulb எறிந்தது :)) கிடைத்தது. அது தான் எனது முதல் Eureka moment. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. அறைக்குள் தனிய, யாருடமாவது சொல்லவேண்டுமென்று உடனே அம்மாவிற்கு தொலைபேசி அடித்தேன். அம்மா நித்திரைத் தூக்கத்தில் ஊரிலிருந்து யாராவது அவசரமாக எடுக்கினமோ என எண்ணி வந்து தொலை பேசியை எடுக்க நான் "அம்மா இப்ப தான் முதன் முதலா ஒரு விஞ்ஞானியாக உணர்கின்றேன்" என்று கத்தினேன். அது வரைக்கும் ஆட்கள் "ஒரு தமிழ் பெண்பிள்ளைக்கு ஆராய்ச்சி எல்லாம் சரிவராது. அதுகள் இதுலேயே ஊறி விசராகிடுங்கள், பிறகு குடும்பம் எல்லாம் பார்க்கேலாது" என்ற போது கொஞ்சம் யோசித்த அம்மா, அந்நேரத்தில் அது சரியாகிவிடுமோ என ஒரளவுக்குப் பயம் வருகுதென்றார். :) It trully was an amazing feeling to have figured out something that nobody has before.

"Research is to see what everybody else has seen, and to think what nobody else has thought"
ஆய்வு என்ப‌து எல்லோரும் பார்க்கும் ஒன்றைப் பார்த்து யாரும் சிந்திக்காத‌ ஒன்றை சிந்திப்ப‌து.
Albert Szent-Gyorgyi, Hungarian Biochemist


ஒரு ந‌ல்ல‌ விஞ்ஞானிக்கு என்ன‌ இருக்க‌ வேண்டும்?
அறிய‌ மிகுந்த‌ ஆர்வ‌ம் வேண்டும்.
கேள்விக‌ள் கேட்க‌ வேண்டும்.
பரந்த சிந்திக்கும் தன்மை வேண்டும்.
உங்க‌ள் ஆய்வின் முடிவுக‌ளையே ப‌ல‌முறை உங்க‌ளுக்குள்ளேயே கேள்வி கேட்டுத் தெளிய‌ வெண்டும்.
விடா முய‌ற்சி வேண்டும். அநேக‌மாக‌ ஒவ்வொரு ஆய்வும் தெரியாத‌ ஒரு பாதையில் கால் வைப்ப‌து போல‌வே தொட‌ங்கும். அத‌னால் அநேக‌மாக‌ முத‌லில் எத்த‌னையோ தோல்விக‌ளைச் ச‌ந்திக்க‌ வேண்டிவ‌ரும். அத‌னால் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் க‌ற்க‌க் கூடிய‌தைக் க‌ற்று, விடாம‌ல் முன்னேற‌ வேண்டும். It is a roller coster ride.
க‌டின‌ உழைப்பு வேண்டும்.

Was your PhD fun/Did you enjoy it? உங்களின் ஆய்வு எதைப் பற்றியது?
ஓம். I can honestly say that they were few of my best years in my life. அறிவிய‌லில் நான் க‌ற்ற‌ திற‌மைகள் என்னிலேயே ப‌ல‌ மாற்ற‌ங்க‌ளைக் கொண்டு வ‌ந்த‌து. நான் சாதார‌ண‌மாக‌ப் பார்த்த பல விட‌ய‌ங்க‌ளைப் புதிய‌ கோண‌த்தில் பார்க்க‌ வைத்த‌து. அறிவிய‌ல் செய்யும் போது விருத்தியாகும் திற‌மைக‌ளை பல் வேறு துறைக‌ளில் ப‌ய‌ன் ப‌டுத்த‌முடியும்.

என‌து ஆய்வு endometrium என்றோரு tissue ப‌ற்றிய‌து. க‌ருப்பையின் outer most layer தான் endometrium. இதுவே மாத‌விடாயின் போது உதிர்ந்து பின் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ள‌ர்ந்து/ஒவ்வொரு மாத‌மும் ஒரு க‌ருவிற்கு வீடாகுவ‌த‌ற்கு த‌ன்னைத் த‌யார் செய்து, அவ்வாறு க‌ரு த‌ங்காம‌ல் போகுமிட‌த்து ஒரு சிறு basal layer ஜ‌த் த‌விர‌ ம‌ற்றெல்லாவ‌ற்றையும் முற்றிலும் உதிர்த்து திரும்ப‌வும் அடுத்த‌ cycle இல் த‌ன்னை ஒரு க‌ருவிற்காக‌ த‌யார் செய்ய‌ வ‌ள‌ரும் tissue. உட‌லில் வேறெந்த‌வொரு tissue ஆலும் இவ்வாறு செய்ய‌ முடியாது. இந்த‌ tissues இன் வ‌ள‌ர்ச்சியை estrogen, progesterone எனும் ஒரு ஹார்மோன்க‌ள் க‌ட்டுப்ப‌டுத்துகின்ற‌ன‌. என‌து ஆய்வு ஒவ்வொரு மாத‌மும் endometrium இன் வ‌ள‌ர்ச்சியில் ப‌ங்குப‌ற்றும் ம‌ர‌ப‌ணுக்க‌ளைப் ப‌ற்றிய‌து. அவை எவ்வாறு மாறுகின்ற‌ன‌. Steroid hormones அவ‌ற்றை எவ்வாறு க‌ட்டுப்ப‌டுத்துகின்ற‌ன‌. இவ‌ற்றின் செய்கைக‌ளில் பிழைக‌ள் ஏற்ப‌டின் அத‌னால் வ‌ரும் விளைவுக‌ள் என்ன‌? இதுவ‌ரை அறிய‌ப்ப‌டாத‌ புதிய‌ முக்கிய‌மான‌ ம‌ர‌ப‌ணுக்க‌ள் ஏதாவ‌து இந்த‌ tissue இன் வ‌ள‌ர்ச்சிக்கு அவ‌சிய‌மா? க‌ருத்த‌ரிக்க‌ முடியாத‌ பெண்க‌ளில் இம்ம‌ர‌ப‌ணுக்க‌ள் எவ்வாறு மாறுப‌டுகின்ற‌ன‌?

அறிவிய‌ல் உல‌கில் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ எல்லாவ‌ற்றையும் க‌ண்ட‌றிந்து விட்ட‌தா?
கொஞ்ச‌மும் இல்லை. இன்னும் நிச்ச‌ய‌மாக‌க் 'க‌ற்ற‌து கை ம‌ண் அள‌வு க‌ல்லாத‌து பிர‌ப‌ஞ்ச‌ம‌ள‌வே'. நாம் செய்யும் ஒவ்வொன்றாலும் ஒரு மிக‌ப் பெரிய‌ புதிரில் மிக‌ச் சிறிய‌ ப‌குதிக‌ளையே க‌ண்ட‌றிகின்றோம். இன்னும் எவ்வ‌ள‌வோ செய்ய‌ இருக்கிற‌து.

Friday, October 7, 2011

Steve Jobs' 2005 Stanford Commencement Address

Thursday, October 6, 2011

40 கிழமைகளில் கிட்டத்தட்ட 18 ± 2 கிழமைகள் முடிந்துவிட்டது :)


"இங்க வாங்கோ பபா ஒண்டு சொல்லோணும்!அம்மான்ட tummy க்குள்ள ஒரு குட்டி T.rex இருக்கு." என்று அகரன் தான் முதலில் எமது குடும்பத்தாரிடம் தெரிவித்தான். :) உறுதிப்படுத்தியபின் அவனிடம் சொன்ன போது அதை பெரிய serious ஆக எடுத்ததாகத் தோன்றவில்லை. ஆனால் இப்ப அநேகமாகக் கதைப்பது இதைப்பற்றித் தான். அடுத்த நாள் Kindy முடியக் கூட்டச் சென்றபோது அவனது ஆசிரியைகள், "So is the rumour we are hearing from Aharan true?" I was like "what did he tell you?" That you have a baby in your tummy!


இப்போ கேட்கும் கேள்விகள்:

குட்டி பபா எப்ப வெளியே வரும்?

குட்டி பபா boy ஆ girl ஆ? ஆனால் யாரும் உங்களுக்கு தங்கச்சியா தம்பியா வேணும் எனக் கேட்டால் வரும் பதில், "பபாக்கு நாய்க்குட்டி தான் வேணும்." ?! (தன்னை பபா என்றே சொல்வான்.)

குட்டி பபா ஏன் அம்மாவின் tummy இல் மட்டும் இருக்கு, அப்பாவின் tummy இல் ஏன் இல்லை?

குட்டி பபா என்ன சாப்பிடும்? இதற்கு நான் "குட்டி பபாக்கு இன்னும் சாப்பிடத்தெரியாது. அம்மாவின் tummy இலிருந்து பபாவின் tummy க்கு ஒரு குழாய் இருக்கு. அம்மா சாப்பிடும் சாப்பாடு அந்த குழாயால் பபாவிற்குப் போகும் என்றேன். அதோடு பபா தண்ணியிலே தான் இருந்து வளர்கிறது என்றேன்". அண்மையில் ஒரு சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தான், "சித்தி, அம்மான்ட tummy இல நிறையத் தண்ணி இருக்கு. குட்டி பபா அதிலதான் swim பண்ணிட்டிருக்கு".:)
 

எங்காவது நாம் வெளியில் போய் திரும்பியதும் யாருடன் போனனீங்கள் என்று கேட்டால் வரும் பதில், "அம்மாவோட, அப்பாவோட, குட்டி பபாவோட." :)

அதோடு பபா தான் குட்டி பபான்ட அண்ணா அன்றும் எல்லோருக்கும் அறிவித்தாயிற்று.

"நான் இனி சின்னன் இல்லை. வளந்திட்டன். நான் அண்ணா!"

it's quite amazing to see his excitement.

Wednesday, August 3, 2011

பேராசிரியர் வி.எஸ். ராமச்சந்திரன்



Josette Sheeran: Ending hunger now

Friday, July 15, 2011

மணமகள் பற்றாக்குறையா? காரணம் என்ன?

xx% பெண்கள் கட்டுங்கடங்காமல் திரிவதால் தான் நாடு உருப்படாமல் போயிற்று, பெண்களுக்கெல்லாம் சம உரிமை வந்தாயிற்று, இன்னும் சும்மா தொன தொணக்க வேண்டாம், பெண்கள் அதிகம் படிப்பதால் தான் ஆண்களின் வாழ்வு நாசமாயிற்று, வீடு அறம்புறமாயிற்று. இப்படியெல்லாம் சொல்பவர்களிடம் முதலில் கேட்பது - நீங்கள் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எப்படிப் பெண்கள் அதிகம் படித்ததால் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள் என்கிறீர்கள்? எங்கையாவது இதற்கெல்லாம் ஆய்வுகள் செய்தார்களா?

அநேகமாகக் கிடைக்கும் பதில் - இதற்கெல்லாம் ஆய்வா - தேவையேயில்லை. எனது நண்பனின் நண்பனின் நண்பனுக்கு நடந்திருக்கென்று சொன்னவன். ஒரு பத்திரிகையில் ஒரு சம்பவம் வாசித்தனான். இதுக்கும் மேலால் புள்ளி விபரங்கள் என்ன சொல்ல முடியும்?! Indeed idiot, What other evidence could you possibly want other than these powerful anecdotes? Women are on the loose and men's world is crumbling - you want to talk to me about statistics?????

YES! I DO! Please bear with me!

புள்ளி விபரங்களால் என்ன சொல்ல முடியும் என்று பார்க்கலாமா?
  • உலகில் பெண்களின் வாழ்விற்கு மிக மோசமான இடங்களில் இந்தியா நாலாவது இடத்தை வகிக்கிற‌தாம்.
  • இந்தியாவின் மொத்த சனத்தொகையில் எத்தனையோ மில்லியன் பெண்களை காணவில்லையாம். இது அவ‌ர்க‌ள் பெரிய‌ ப‌டிப்பெல்லாம் ப‌டித்து பூமியில் ஆண்க‌ளுட‌ன் பெரிய‌ தொல்லையென‌ செவ்வாய்க்குப் போன‌தால் இல்லையாம். Shocking isn't it. Knowing educated crazy women, that would have been my first guess. பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கருவைக் கலைப்பதாலும் பிறந்தபின் கொல்வதாலும் தானாம் இந்த விளைவு.
  • க‌டைசியாக‌ எடுத்த‌ க‌ண‌க்கெடுப்பின் ப‌டி ஒவ்வொரு 1000 ஆண்க‌ளுக்கும் 914 பெண்க‌ள் தான் இருக்கிறார்க‌ளாம். இதுவரைக்கும் எடுத்த கணக்கெடுப்புகளில் இந்த வருட விகிதம் தான் மிகவும் மோசமானதாம். இந்த விகித‌ம் இப்ப‌டியே மாறாம‌ல் தொட‌ர்ந்தால், ஆண்டுக்கு 600,000 காணாம‌ற்போகும் பெண்க‌ள், 18 வ‌ருட‌ங்க‌ளில் 10 மில்லிய‌ன் காணாம‌ற் போக‌ப்போகும் ம‌ண‌ம‌க‌ள்மாராம். I know, that puts it into perspective right? who cares about girls, through quality upbringing turning into amazing women if they are not going to be available as brides.
  • 2001 க‌ண‌க்கெடுப்பு ப‌டி இந்தியாவில் 19 வ‌ய‌திற்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ம் செய்யாத‌ ஆண்க‌ள் 9.3%, பெண்க‌ள் 3.2% ஆம். இத‌ன் ப‌டி 34.1 மில்லிய‌ன் ஆண்க‌ளுக்கு 2001 இல் திரும‌ண‌ம் செய்ய‌ப் பெண்க‌ள் இல்லையாம். இது வ‌ருங்கால‌த்தில் மோச‌மாக‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் உண்டாம். பெண்க‌ள் இல்லாத‌தால் ஆண்க‌ள் திரும‌ண‌த்தைத் த‌ள்ளிப்போட்டால், ஒவ்வொரு முறையும் திரும‌ண‌ச்ச‌ந்தைக்கு வ‌ரும் மில்லியன் கணக்கான‌ ஆண்க‌ள், த‌ம‌து ச‌க‌ வ‌ய‌துடைய‌ ஆண்க‌ளுட‌ன் ம‌ட்டும‌ன்றி ஏற்க‌ன‌வே திரும‌ண‌ம் ஆகாம‌ல் இருக்கும் வ‌ய‌து கூடிய‌வ‌ர்க‌ளுட‌னும் போட்டி போட‌ வேண்டுமாம்.


இன்னும் சில‌ bonus புள்ளி விப‌ர‌ங்க‌ள்
  1. ஆறில் ஒரு பெண்கள் தமது 15 ஆவது பிறந்த நாளைப் பார்க்க உயிருடன் இருப்பதில்லை.
  2. இந்தியாவில் பிறக்கும் 12 மில்லியன் பெண் பிள்ளைகளில் 1 மில்லியன் குழந்தைகள் தமது முதலாம் பிறந்த நாளுக்குக் கூட இருக்கமாட்டார்கள்
  3. ஆறில் ஒரு பெண் பிள்ளையின் மரணத்திற்குக் காரணம் பாலியல் ஒடுக்குமுறை
  4. 2009 இல் இந்தியாவில் நடத்தப்பட்ட women's trafficking இல் கிட்டத்தட்ட 90% நாட்டிற்குள்ளேயே நடத்தப்பட்டது. இருக்கும் 3 மில்லியன் பாலியல் தொழிலாளிகளில் 40% மானோர் சிறுமிகள்.
  5. நான்கு வ‌ய‌திற்குக் கீழுள்ள‌ சிறுமிக‌ளின் இற‌ப்பு விகித‌ம் சிறுவ‌ர்க‌ளை விட‌க் குறிப்பிட்ட‌ள‌வு கூட‌. க‌ருக்க‌லைப்பிலிருந்தும் சிசுக்கொலையிலிருந்தும் த‌ப்பித்தாலும் சிறுமிகளுக்கு த‌டுப்பூசிக‌ள் போடுவ‌து, போதுமான‌ள‌வு உண‌வ‌ளிப்ப‌து, தேவையான‌ பொழுது ம‌ருத்துவ‌ச் சிகிச்சை எல்லாம் குறைவென்ப‌தாலேயே இந்த‌ விளைவு.
  6. 53% ஆன‌ ஜ‌ந்து வ‌ய‌திற்கும் ஒன்ப‌து வ‌ய‌திற்கும் இடைப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளுக்கு எழுத‌ப் ப‌டிக்க‌வே தெரியாது.
Extra Bonus points
  1. இந்தியாவில் உய‌ர் க‌ல்விக்கு சேர்ப‌வ‌ர்க‌ள் 61.7% ஆண்க‌ள், 38.3% பெண்க‌ள்
  2. ச‌மமான‌ வேலைக்கு ஆண்க‌ள் கிடைப்ப‌தைவிட‌ 33% குறைவாக‌வே பெண்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கிற‌து.

 References:
1. Afghanistan worst place in the world for women, but India in top five
2. Gendercide in India: Add sugar and spice
3. Sex-selective abortion: Looking out for baby girls
4. UNEQUAL SEX RATIOS, BRIDE SHORTAGE & MARRIAGE MIGRATION
5. Characteristics of Sex-Ratio Imbalance in India, and Future Scenarios
6. Because I am a girl: The State of the Girl Child in India 2009
7. Unnatural Selection: Choosing Boys Over Girls and the Consequences of a World Full of Men
8. Women in the Labour Force in India
9. Higher Education in India

Tuesday, July 12, 2011

Walking with Dinosaurs

ஜுராசிக் பார்க் படம் வந்த நேரம் தான் A/L படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்ப தொடங்கிய இந்த dinosaurs மேலுள்ள fasciniation என்னும் விட்டுப் போகவில்லை.

நாம் வெறும் 200,000 ஆண்டுக‌ளாக‌வே இங்கு இருக்கிறோம். இவை 200 மில்லிய‌ன் ஆண்டுக‌ளாக‌ பூமியை ஆட்சி செய்த இன‌ங்க‌ள். இவைக‌ளின் கால‌த்தில் எம‌து மூத‌தைய‌ர் மிக‌ச் சிறிய‌ lemurs மாதிரி இருந்ததால் பிழைத்தது. அதோடு அந்த விண்கல் மட்டும் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வந்து பூமியைத் தாக்கியிராவிட்டால் எமது மூதாதையரின் பரிணாமப்பாதையில் நாம் இருந்திருப்போமா என்பது சந்தேகமே.

இவ்வருடம் எனது பிறந்த நாளிற்குக் கிடைத்த ஒரு பரிசு Walking with Dinosaurs காட்சிக்கான tickets. இப்போ ஒரு ஒரிரு மாதங்களாக இங்கு காட்டுகிறார்கள் என நினைக்கிறேன். முதலில் மகனையும் கூட்டிக் கொண்டு போகலாமென எண்ணிப் பின், இதுவரை படங்களில் மட்டுமே பார்த்தவன் பயப்படுவானோ எனத் தயங்கினேன். பின் போகும் வழி பார்க்க அதன் இணையத்தளத்திற்குச் சென்ற போது இரண்டு வயதும் அதற்குக் கீழான குழந்தைகளை எங்கள் மடியில் வைத்திருக்க முடியுமென்றால் இலவசமாகக் கூட்டிச் செல்லலாம் என இருந்தது. அவர்களுக்குப் பொருத்தமில்லையெனில் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்களென முடிவு செய்து, Dinosaurs வாரீங்களா என மகனிடம் கேட்க, அவனும் மிகுந்த ஆர்வத்துடன் ஓம் என்றான். சரியென போன சனிக்கிழமை சென்றோம்.

Huxley எனும் ஒரு தொல்லுயிரியலாளர் (paleontologist) ஒரு dinosaur எலும்பைக் கண்டுபிடித்து பின் காலத்தில் பின்னோக்கிச் செல்வது போன்று காட்சி தொடங்கியது.காட்சியின் பல அம்சங்கள் மிகவும் நன்றாக இருந்தது. பல சிறந்த வடிவமைப்பாளர்கள் சேர்ந்து பல தொல்லுயிரியலாளர்கலினது உதவியுடன் 20 dinosaurs ஜ இயலுமானளவு சரியாக அமைத்திருந்தார்கள்.

இக்காட்சிகள் சிறுவர்கள் முதல் பெரியோர்வரை, எல்லாவகையான மக்களுக்கும் என்றாலும், பல ஆராய்ச்சிகளால் கண்டறியப்பட்ட அடிப்படையான விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். தனிய பிரமாண்டமான dinosaurs ஜக் காட்டுவது மட்டுமன்றி, கண்டங்களின் இயக்கங்கள் (continental drift), காலம், பரிணாமம், அக்காலகட்டத்தில் இருந்ததாகக் கருதப்படும் இயற்கை அமைப்புக‌ள், தாவரங்களின் இயல்புகள் எனப் பல‌ அடிப்படைச் செய்திகளைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தது நன்றாக இருந்தது. காட்டப்பட்ட dinosaurs எல்லாமே பிரமாண்டமாக, வியக்கத்தக்கதாக இருந்தது. ஒவ்வொரு ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப அரங்கைச் சுற்றி தாவரங்களை மேலே வரச் செய்திருந்தனர். Dinosaurs இன் ஆரம்பக் கால கட்டங்களில் (TRIASSIC PERIOD, 245 to 208 million years ago) புற்க‌ளோ பூக்க‌ளோ இருக்க‌வில்லை. அக்கால‌த்தில் ferns, horsetails போன்ற‌ தாவ‌ர‌ங்க‌ளே இருந்த‌ன‌. முத‌ன் முத‌லில் பூக்கும் தாவ‌ர‌ங்க‌ள் கிட்ட‌த்த‌ட்ட‌ 144 மில்லிய‌ன் ஆண்டுக‌ளுக்கு முன் Cretaceous காலத்தில் தோன்றின. இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் காட்சியில் இணைத்திருந்தார்கள்.

என் மகனிற்கு மிக மிகப் பிடித்திருந்தது. பலமாகச் சத்தமிட்டு, host ஒவ்வொரு dinosaur பெயரையும் சொல்லும் போதும் தானும் சொல்லி, சிரித்து, மிக ரசித்துப் பார்த்தான். இதுவரையிலும் T.Rex உம் ஒரு Diego episode ஆல் Mayasaurus உம் தெரிந்திருந்தவன், இப்போ இன்னும் சில dinosaurs இன் பெயர்களையும் அவை எவ்வாறு இருந்திருக்குமெனவும் தெரிந்துள்ளான். Which is pretty cool. அதனால் விலங்குகளில் சாதாரணமாக interest உடைய குழந்தைகளை இக்காட்சிகளுக்கு கூட்டிச்செல்லலாம்.

இக்காட்சிகளைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு அவர்களின் இணையத் தளத்திற்குச் செல்லலாம்.


படங்கள் வடிவாக எடுக்க முடியவில்லை. இப்படத்தில் இருப்பது ஒரு தாய் Brachiosaurus உம் ஒரு சேய் Brachiosaurus உம். இவை தாவரவுண்ணிகள். எம்மிடம் முழு எலும்புக்கூட்டோடும் இருக்கும் பெரிய dinosaurs இல் ஒன்று.

Monday, July 11, 2011

The Importance of Free Speech

44 நிறவுருக்களைக் கொண்ட மனிதன்

அநேகமான மனிதருக்கு தாயிடமிருந்து 23, தந்தையுடமிருந்து 23 ஆக 23 சோடி = 46 நிறவுருக்கள் உண்டு. இதில் அநேகமாக எதாவது நிறவுருக்கள் இல்லாமலோ அல்லது ஒரன்று கூடுதலாகவோ இருந்த்தால் அநேகமாக அந்தக் கரு கலைந்து விடும் அல்லது கரு நிலைத்து பின் குழந்தை பிறப்பின் அதன் உடலில் பல சிக்கல்கள் இருக்கும். உதாரணம்: நிறவிரு 21 மூன்று இருந்தால் அக்குழந்தைக்கு down syndrome நிச்சயம்.

இப்போது முத‌ன் முத‌லாக‌ சீனாவில் 44 நிற‌வுருக்க‌ளைக் கொண்ட‌ ஒரு ம‌னித‌னைக் க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள். இவ‌ரின் 15 ஆவ‌து நிற‌வுரு 14 ஆவ‌து நிற‌வுருவோடு இணைந்து விட்ட‌து. அத‌னால் இவ‌ருக்கு நிற‌வுரு 15 இல்லை. ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ர‌ப‌ணுக்க‌ளுக்கும் சேத‌மேதும் ஏற்ப‌ட‌வில்லையாத‌லால் இவ‌ருக்கு குறிப்பிட்ட‌ள‌வு ம‌ருத்துவ‌ச் சிக்க‌ல்க‌ள் எதுவும் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை. That's amazing!

இவ‌ருக்கு எப்படி 44 நிற‌வுருக்க‌ள் வ‌ந்த‌து?

இவ‌ரின் குடும்ப‌த்தில் ப‌ல‌ர் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ளுக்குள் திரும‌ண‌ம் செய்திருக்கின்றனர். எங்கேயோ ஒரிட‌த்தில் balanced translocation என்ற‌
நிற‌வுரு ம‌றுசீரமைப்பு நடந்துள்ளது. இதன் படி இரு நிறவுருக்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இதனால் மரபணுக்கள் எதுவும் இழக்கப்படாததால், இப்படி இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது மிகக் கடினம்.
அநேகமாக தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு இந்த மாதிரி நிற‌வுரு ம‌றுசீரமைப்பு நடந்திருந்தால், கருக்கட்டப்படும் இரண்டில் மூன்று கருக்கள் சிதைவடையும். முட்டையும் விந்தும் உற்பத்தி செய்யப்படும் போது நிறவுருக்களை பிரிவடையும் போதே பிரச்சனை வரும்.


சாதாரணமாக எமது உடலில் உள்ள செல்களில் ஒரு சோடி நிறவுருக்கள் இருக்கும். ஆனால் முட்டையிலும் விந்திலும் நிறவுருக்களின் ஒவ்வொரு நகல்களே இருக்கும். முட்டையில் 23 நிறவுருக்களும் விந்தில் 23 நிறவுருக்களும் இருந்து, பின் இராண்டும் இணையும் போது 23 சோடியுடைய உயிர் உருவாகும். இதனாலேயே மேற்சொன்ன நிறவுரு மறுசீரமைப்பு நடந்துள்ளவர்களுக்குப் பிரச்சனை வரும். அவர்களின் முட்டைகளுலும் விந்துகளிலும் சிலவற்றில் ஒரு சோடியற்ற நிறவுருவும் சிலவற்றில் மூன்று நகல்களைக் கொண்ட நிறவுரும் இருக்கும்.

கீழே காட்டப்பட்டவாறு:


முதல் வரிசை சாத்தியமான பெற்றோரைக் குறிக்கிறது. வலப்பக்கத்தில் உள்ளவருக்கு இந்த நிறவுரு மறுசீரமைப்பு உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நிறவுரு மறுசீரமைப்புடையோரது முட்டையோ, விந்தோ காட்டப்பட்டவாறு ஆறு வித்தியாசமான முறையில் இருக்கலாம். இரண்டாவது வரிசை, அவர்களில் இருக்கும் முட்டையிலோ, விந்திலோ உள்ள மறுசீரமைக்கப்பட்ட நிறவுருக்களின் அமைப்பைக் காட்டுகிறது. இந்த இணைப்பால் ஆறு விதமான நிறவுரு அமைப்புக்களுடன் கருக்கள் உருவாக சாத்தியமுள்ளது. அதில் இரு குறிப்பிட்ட அமைப்புக்களால் மாத்திரமே கருக்கட்டியதும் கலையாமல் இருக்க சாத்தியம்.

இந்த‌க் குறிப்பிட்ட‌ ம‌னித‌ரின் குடும்ப‌த்தில் எத்த‌னையோ க‌ருச்சிதைவுக‌ளும் த‌ன்னிச்சையான‌ க‌ருக்க‌லைப்புக‌ளும் ந‌ட‌ந்துள்ள‌ன‌. இவ‌ரின் தாய் த‌ந்தை இருவ‌ரும் first cousins.  இருவ‌ரும் ஒரே நிற‌வுரு ம‌றுசீர‌மைப்பைக் கொண்ட நிறவுருவின் ஒரு நகலைக் கொண்டுள்ள‌ன‌ர். அதனால் இவர்களுக்கு ஒரே ஒரு நிறவுரு 14, ஒரே ஒரு நிறவுரு 15, ஒரே ஒரு மறுசீரமைக்கப்பட்ட நிறவுரு 14 உள்ளது. அத‌னால் இவ‌ர்க‌ள் பிள்ளை பெற‌ நினைக்கையில் அவ‌ர்க‌ளுக்கு பிர‌ச்ச‌னைக‌ள் இர‌ட்டிப்பாகியிருக்கும்.




இவ‌ர்க‌ளால் 36 வேறு வேறு நிறவுரு அமைப்பைக்கொண்ட க‌ருக்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட‌லாம். அவ‌ற்றில் 8 குறிப்பிட்ட நிறவுரு அமைப்புகளைக் கொண்ட குழந்தைகளையே உயிருடன் பார்க்கலாம். அதில் இம்மனிதரை மாதிரி அதே நிறவுரு மறுசீரமைப்பு இரு நகல்களாக/ஒரு சோடியாக வர ஒரே ஒரு சந்தர்ப்பமே உண்டு.

இவருக்கு பிள்ளைகள் பெறுவதில் இவரது பெற்றொர் அளவிற்குப் பிரச்சனை இருக்காது. ஏனெனில் இவரிடம் சோடியற்ற நிறவுருக்கள் ஏதும் இல்லை. அதனால் சாதாரணமாக 46 நிறவுருக்களைக் கொண்ட பெண்ணுடன் குழந்தைகள் பெறலாம். ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் இந்த மறுசீறமைக்கப்பட்ட நிறவிரு ஒன்றே இருக்குமாதலால், அவர்களுக்கு இப்பிரச்சனை நிச்சயம் இருக்கும்.

என்னுடைய பரிணாமம் என்றால் என்ன என்ற பதிவில் எப்படி எமது நெருங்கிய உறவான மனிதக் குரங்குகளுக்கு 48 நிறவுருக்களும் எமக்கு 46 நிறவுருக்களும் இருக்கின்றன என விளக்கியிருந்தேன். எம‌து மூதாதைய‌ருக்கும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஓரு மில்லிய‌ன் ஆண்டுக‌ளுக்கு முன் 48 சோடி நிற‌வுருக்க‌ளே இருந்த‌ன‌ என்ப‌த‌ற்கு சான்றுக‌ள் உள்ள‌ன‌.


Friday, July 8, 2011

நாம் எல்லோரும் ஆபிரிக்காவின் பிள்ளைகள் - எமது கதை



From : Symphony of Science

Friday, June 24, 2011

நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பாதுகாப்பான முறையில் பரிசீலனை செய்வதற்கான‌ இடங்களே அவசியம் - தடைகளல்ல.

நான் கீழ்வரும் பதிவை வாசித்ததிலிருந்து  இந்தப் பதிவு எழுத‌ வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஹிஜாபைப் பற்றியோ niqab ஜப்பற்றியோ தமிழில் அநேகமாக ஆண்களின் கருத்துக்களே வாசித்திருக்கின்றேன். சில பெண்களின் கருத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்துள்ளேன். தமிழில் அல்ல. அவற்றிலும் அநேகமானவை ஒரேமாதிரியான, ஆண்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது, ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற இதுவே ஒரே வழி, என்ற மாதிரிக் கருத்துகளே, which has no basis or evidence. தமது நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் முஸ்லிம் பெண்களின் கருத்துகள் மிகக் குறைவு. அவ்வாறு கருத்துகள் எழுதினால் அதற்கு எதிர்ப்பு பலமாக‌ இருக்கும் என்பதாலோ தெரியவில்லை.
That's why I was pleasantly surprised to read the following post.

கீழ்வரும் பதிவை எழுதியவர் பெயர் நாடியா எல்-அவாடி (Nadia El-Awady). இவர் எகிப்தில் வசிக்கும் ஒரு அறிவியல் நிருபர். உலக அறிவியல் நிருபர்களின் சங்கத்தின் தலைவர். இஸ்லாத்தைப் பின்பற்றுபவர். Inner workings of my mind இவரது சொந்த வலைத்தளம். பின்வருவது அவ்வலைத்தளத்தில் அவர் எழுதிய சிலவற்றின், அவரின் அனுமதியுடனான மொழிபெயர்ப்பு.

ஹிஜாபைப் பற்றி பல வருடங்களாகச் சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். ஏன் ஹிஜாப் பெண்களுக்கு இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்பட்டது? உண்மையில் கட்டாயமாக்கப் பட்டுள்ளதா அல்லது ஒரு சில ஆண்கள் சேர்ந்து அந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாக்க ஹிஜாப் அவசியமானதென முடிவு செய்தார்களா? 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே காரணங்கள் இக்காலத்திலும் உண்டா? உண்டெனில் ஏன்? தன்னை ஒரு போதைப் பொருளாக மற்றவர்கள் பார்ப்பதையும் பாலியல் வன்முறையையும் தடுப்பதற்கு ஒரு பெண் தன்னை தலையிலிருந்து கால் விரல் வரை மூடுவது கட்டாயம் அவசியமானதா?

நான் கடந்த 10 வருடங்களாக பல இடங்களுக்குப் பயணித்திருக்கின்றேன். போகுமிடங்களில் பெண்கள் எவ்வாறு உடை உடுத்துகிறார்கள்? அவ்வுடைகளுக்கு ஆண்களின் reactions என்ன? என அவதானித்துள்ளேன். நான் எப்போதும் பெண்கள் என்ன உடை உடுத்திருந்தாலும், குறிப்பிட்ட நபர்களின் சொந்தக் கற்பனையில்/கருத்தில் அந்த உடை என்னத்தைப் பிரதிபலிக்கின்றது என்பதை வைத்தே அவர்களின் reactions இருக்கிறது. குறிப்பாக நான் அவதானித்தது: பெண்கள் என்ன உடுத்திருந்தாலும் சிலர் பெண்களை பொருத்தமற்றவாரே நடத்துவார்கள். சிலர் மிகக் குறைவாக உடுத்திருந்தால் மோசமாக நடத்துவார்கள், சிலர் தலை முதல் கால் வரை மூடியிருந்தாலும் மோசமாக நடத்துவார்கள்.

இந்நாட்களில் என் கண்களைத் திறக்க முயற்சிக்கின்றேன். எனக்கு எது சரி, எது பிழை எனப் படுகின்றது என முடிவு செய்ய முயற்சிக்கின்றேன். எனக்குக் கற்பிக்கப் பட்டதை வைத்தல்லாமல் நானே என்ன உண்மையில் நம்புகின்றேன் என எனக்கு அறிய ஆவல். இதற்காக முதலில் இருந்து தொடங்கி அது என்னை எங்கே கொண்டு போய் விடுமென செய்து பார்க்க ஆசைப்படுகின்றேன். அது எப்போதும் சுலபமல்ல. சிறு வயதிலிருந்து எனக்குப் புகட்டப்பட்டதால், போதிக்கப்பட்டதால், நான் பாடமாக்கியதால் படிந்த படிமங்களைத் தோண்டி அடியில் இருக்கும் மூலமான innocence ஜ அடைந்து அதிலிருந்து தொடங்குவது மிகக் கடினம். அந்த original innocence ஜ நான் இன்னும் அடையவில்லை. ஆனால் இந்தப் படிமங்களைத் தோண்டத் தொடங்கியுள்ளேன். கேள்விகள் கேட்கத் தொடங்க முதல் இருந்த நிலைக்கே நான் திரும்பலாம்/திரும்பாமலும் விடலாம். இத்தேடலால் எந்நிலையை அடைகிறேனோ அது நான் சொந்தமாக எடுத்த முடிவாக இருக்க வேண்டும். இப்படித் தான் நான் இருக்க வேண்டுமென்ற போதனைகளாளோ கட்டாயத்தாலோ இருக்கக் கூடாது.

(...)

நான் ஜ‌ரோப்பாவிற்கு ப‌ய‌ணித்திருந்த‌ போது, பார்சிலொனாவில் ஒரு காலை என‌து ஹொட்ட‌ல் அறையிலிருந்து தலையில் ஒன்றும் இல்லாமல் க‌ட்டைக் கையுடைய‌ ச‌ட்டையுடனும் ஜீன்ஸ் உடனும் வெளியே வர முடிவு செய்தேன்.

நான் காலைச் சாப்பாடு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் இட‌த்திற்குச் சென்ற‌ உட‌னேயே யார் க‌ண்ணுக்கும் தெரியாத‌வ‌ளாக‌ உண‌ர்ந்தேன். குறிப்பாக ஜரோப்பாவில், ஹிஜாப் அணிந்திருப்பதால் ஆட்க‌ள் என்னை அவ‌தானிப்ப‌து கொஞ்சம் எனக்குப் பழக்கப்பட்டிருந்தது. அநேகமாக இந்தமாதிரி ஹொட்டல் காலை உணவுண்ணும் இடங்களில் அது ஓரளவு கூடுதலாகவே இருந்தது. அதனால் முதன் முதலாகப் பயணிக்கும் போது யார் கண்ணுக்கும் படாதவளாக உணர்ந்தேன். உடனேயே இந்த கவனிப்பை இழந்ததாக உணர்ந்தேன். கொஞ்சம் வருந்தக் கூட செய்தேன்.

தெருக்களில் நடந்து பார்த்தேன். சில கடைகளுக்குச் சென்று பார்த்தேன். எதுவுமில்லை. நான் பல ஆயிரம் ஆட்களில் ஒருவராகியிருந்தேன். எப்பவும் இவ்வாறு பல்லாயிரம் ஆட்களில் ஒருவராக இருந்தேனா? எப்பவும் இவ்வாறு மற்றவர்களின் கண்ணிற்குப் படாதவளாக இருந்திருக்கிறேனா?

இது ஒரு ப‌ரிசோத‌னை ம‌ட்டுமே என்ப‌த‌னால் என‌து தொழில் ச‌ந்திப்புக்க‌ளுக்கு நான் ம‌ற்ற‌ப்ப‌டி சாதார‌ண‌மாக‌ச் செல்வ‌து போன்று ஹிஜாப் அணிந்தே சென்றேன். அவ்வாறே என்னை என் ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ள் என்னை எதிர்பார்ப்பார்க‌ள். நான் நிர‌ந்த‌ர‌மாக‌ ஹிஜாப்பை எடுக்க‌ முடிவு செய்ய‌வில்லை என்ப‌தால் அவ‌ர்க‌ளைக் குழ‌ப்ப‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இருக்க‌வில்லை.

இது ப‌ல‌ நாட்க‌ளாக‌த் தொட‌ர்ந்த‌து. என‌து தொழில் தொட‌ர்பான‌ ச‌ந்திப்புக்க‌ளுக்கு ஹிஜாபுட‌னும் நான் த‌னியாக‌ச் செல்லும் இட‌ங்க‌ளுக்கு ஹிஜாப் இல்லாம‌லும் சென்று வ‌ந்தேன்.....

அது ஒரு சுவார‌சிய‌மான‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து. ஹிஜாபோடும் ஹிஜாபில்லாம‌லும் நான் எப்படி மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றேன் என்பதை ஒப்பிட்ட போது எனக்கு வித்தியாசங்கள் எதுவும் புலப்படவில்லை. அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. நான் முதலில் உணர்ந்த மற்றவர்களின் கண்ணில் படாத தன்மையும் குறீப்பிட்ட கவனிப்பின்மையும் தவிர மற்றப்படி நான் வெளியில் செல்லும் போது என்ன உடுத்தியிருந்தாலும் மற்றவர்களின் கண்ணில் படாதவளாகவே இருந்தேன். நான் கட்டை உடையும் குதிக்கால் உயரமான சப்பாத்துகளும் கூட அணிந்து பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை.

நான் என்ன‌ அணிந்தாலும் ப‌ண்பாடில்லாத‌வ‌ர், ந‌ல்ல‌வ‌ர்க‌ள், எதிலும் அக்க‌றைப்ப‌டாத‌வ‌ர்க‌ள் இருந்தார்க‌ள். எந்த‌ வித்தியாச‌முமில்லை. நான் அணியும் உடையால் இவர்களின் விகிதாசாரம் மாறவில்லை.

இதே ப‌ரிசோத‌னையை ல‌ண்ட‌னில் செய்த‌ போதும் மேற்சொன்ன அதே அனுப‌வ‌மே கிடைத்த‌து. என்னைத் தெரியாத‌வர்க‌ள், நான் என்ன‌ உடுத்துகிறேன் என‌ அக்க‌றை காட்ட‌வில்லை...

ஹிஜாப் இல்லாம‌ல் இரு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளில் செல்லும் போது என்னுள் இரு மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்ந்த‌தை உண‌ர்ந்தேன். ஒன்று நான் ப‌ல‌வ‌ருட‌ங்களுக்கு முன்பிருந்த‌ என்னைச் ச‌ந்தித்தேன். ப‌ள்ளிக்கூட‌ம் செல்லும் போதிருந்த‌ என்னை....

எப்போதும் விட‌ மிக‌ அதிக‌மாக‌ என் பெண்மையை உண‌ர்ந்தேன். நான் கூடிய‌ள‌வு பெண்ணாக‌ உண‌ர்ந்தேன். ம‌ற்ற‌வ‌ர்களின் ந‌ட‌த்தைக‌ளால் அல்ல‌. என்னுள்ளேயே நான் உண‌ர்ந்தேன்.


இன்னுமொரு பதிவில் எவ்வாறு தான் எட்டு வருடங்காளாகக் கண்களைத்தவிர உடலனைத்தும் மூடும் niqab அணிந்திருந்தேன் எனவும் அதை அணியச் சொல்லித் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். பல இடங்களில் எத்தனையோ பெண்கள் ஹிஜப், niqab போன்றவற்றைப் போடுமாறு கட்டயப்படுத்தப்படுகின்றனர். அதேபோல் அவ்வாறு கட்டாயப் படுத்தாமல் தமது சொந்த விருப்பால் (அநேகமாக கடவுளுக்குப் பிடிக்கும் என்று எண்ணுவதால்) அணிபவர்களும் உண்டு.

Societies Overpowered by a Headscarf: It’s Time for Change என்று தலைப்பிட்ட பதிவில் நாடியா எழுதுகிறார்:

எல்லோரும் முஸ்லிம் பெண்ணைக் காப்பதற்கு முயற்சிக்கிறார்கள். மேலை நாடுகளுக்கு இஸ்லாத்திலிருந்து அவளைக் காப்பாற்றவேண்டும். இஸ்லாமிய சமூகத்திற்கு மேலைநாட்டுக் கலாச்சாரத் தாக்கத்திலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்.
யாருமே - யாருமே - ஒரு முஸ்லிம் பெண்ணால் தனக்கு எது நல்லதென சொந்தமாக முடிவெடுக்க முடியுமென எண்ணுவதில்லை.



இதனாலேயே மக்களின் சிந்திக்கும் திறனை கல்வியால் வளர்ப்பதற்குரிய சந்தர்ப்பங்களை மக்களுக்குக் கொடுத்தல், அவர்களுக்கு இதைச் செய், இதைச் செய்யாதே எனக் கட்டளையிடுதலையும் விடச் சிறந்ததென நான் நினைக்கின்றேன். பிரான்ஸ் niqab இற்குத் தடை விதித்த போது அதிக எதிர்ப்பு எழாததற்கு ஒரே காரணம் அநேகமானவர் கள் அது இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என நம்புவதால் மட்டுமே. இத் தடையால் niqab போட்டே வெளியில் செல்லலாமெனக் கட்டாயப் படுத்தப்படும் பெண்களுக்கு வெளியில் செல்ல அனுமதி முற்றாக இல்லாமல் போவதற்கே சந்தர்ப்பம் அதிகம். அநேகமாக ஓரளவிற்கு சுதந்திரமாச் சிந்திக்கும் முஸ்லிம் பெண்களைக் கேட்டோமானால் சொல்வார்கள் தமக்கு எத்தனையோ பிரச்சனைகள், ஒடுக்குமுறைகள் உண்டு, இந்த ஹிஜாப் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று. May be it is time to listen to them and support them in their fight to end oppression.


On a related subject: ஈரானின் பெண்க‌ள் கால்ப‌ந்தாட்ட‌ குழுவை அவ‌ர்க‌ளின் உடைக்காக‌த் த‌டை செய்த‌த‌ற்கும் niqab இல்லாம‌ல் வெளியில் போகாதே என்று கட்டளையிடுவதற்கும் ஒரு வித்தியாச‌மும் இல்லை. Both are equally ridiculous, oppressive and discriminatory.


From here.

somewhat related talk: Radical Women embracing tradition

Monday, June 20, 2011

அப்பா...

இங்கு September முதல் ஞாயிறே தந்தையர் தினம். ஆனாலும் மற்றைய இடங்களில் எல்லாம் நேற்றுப் போலுள்ளது. எனது அப்பாவைப்ப்ற்றி எழுதவேண்டுமென சிறிது காலமாக யோசித்துக் கொண்டிருந்ததால் இந்தப் பதிவு.

He truly is one of a character. என்ன சூழல் எனினும், வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்ற உறுதி கொண்டவர். யாருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர். So much so, அப்பம்மா, மாமி, சித்தப்பா, பெரியப்பா வுக்கே அப்பாவுடன் கதைக்கப் பயம்.

நிச்சயமாக எந்தப் பெண்ணும் இவரைத் திருமணம் செய்ய முன்வரப் போவதில்லை/ அப்படியே முதல் ஒத்துக் கொண்டாலும் பின் நிச்சயமாகத் தொடர்ந்து அவளால் ஒன்றாக வாழவே முடியாது என எல்லோரும் நினைத்தார்களாம். அதனால் யாரும் பெரிதாக அப்பாவிற்குத்திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவேயில்லை எனலாம். அப்பாவே அவ்வாறு தான் நினைத்திருந்தார். He was fairly certain that no woman could stay married to him.

அப்போ அப்பாவிற்கு வயது 35. இக்காலகட்டத்தில் அப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவி எமது அம்மாவின் தோழி. அம்மாவும் அவரும் வவுனியாவில் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அம்மாவுக்கும் வயது 28 ஆகியிருந்தது. அம்மாவிற்கு பல குடும்பச் சிக்கல்கள், பிரச்சனைகளால் திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் பெரிதாக இருக்கவில்லை. அம்மாவின் தோழியும் அப்பாவின் நண்பரும் தான் இருவரையும் கதைத்துப் பொருத்தம் வருமா என யோசிக்கச் சொன்னவை.

அப்பா அம்மாவிடம் சொன்னது:
"நான் மிகவும் எளிமையானவன். போலிகளை வெறுப்பவன். எனக்கு இந்த முகப் பூச்சு, nail polish, சோடனைகள் எதுவும் துண்டறப் பிடிக்காது. அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வீண்செலவு செய்யக்கூடாது.

நீங்கள் படித்தவர் என்பதற்காக உங்களை இளவரசியாக வைத்திருக்க என்னால் முடியாது. :) எனக்கு ஒரளவிற்குப் பெரிய குடும்பம் அவர்களைப் பார்க்க வேண்டும்.  த‌மிழிழேயே எப்போதும் கையெழுத்திட‌ வேண்டும். ஆடம்பரமான வாழ்வு பிடிக்காது. எப்பவும் சைக்கிள், பஸ், தேவையாயின் Train அவ்வளவுதான் ", என்று பல conditions.

அம்மா சொன்ன‌து த‌ன்னால் சீத‌ன‌ம் த‌ர‌ முடியாதென‌ ம‌ட்டுமே.

For some reason, திருமணம் முடிந்ததும் வேலையை விடலாமா எனவும் அம்மாவிடம் கேட்டுள்ளார். ஏனெனத் தெரியவில்லை. ஏனெனில் பின் அம்மாவை எப்போதும் வேலையை விடச் சொல்லிச் சொன்னதில்லை என்பதோடு வேலையில் மேன் மேலும் உயரவும் அப்பா தூண்டியவர். ஏன் அவ்வாறு சொன்னார் என்பதைக் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவும் சம்மதித்து விட்டார். அதன் பின் அப்பம்மாவிடம் அம்மா இதைச் சொன்னபோது அப்பம்மா, "இந்த மூஞ்சூறு சொன்னதென்பதற்காக நீ வேலையை எல்லாம் விட்டுடாதை பிள்ளை." :) இது சொன்னது mid 1976 இல். I think appamma is one of the coolest mother-in-laws.

அப்பாவிற்குத் தனது கௌரவமும் முக்கியமாக இருந்தது. அதனால், அம்மாவிடம் "என்னுடன் வாழ்வது மிகக் கடினம். தயவு செய்து கவனமாக யோசித்து முடிவு சொல்லுங்கோ. நீங்கள் என்னைத் திருமண‌ம் செய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை. திருமணப் பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் கூட வேண்டாமென்று சொல்லலாம். ஆனால் கையெழுத்திட்டால் அவ்வளவுதான். அதற்குப் பிறகு விவாகரத்தென்றால்லாம் பேச்சே இருக்கக் கூடாது. இருவருக்கும் ஒத்துவராவிட்டால் ஒரே வீட்டில் நீங்கள் ஒரு அறை, நான் ஒரு அறையில் இருப்பம் ஆனால் வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது." என்றும் சொன்னாராம். :)

இதெல்லாம் இப்போ யாரிடம் சொன்னாலும் அவர்கள் அம்மாவிடம் முதல் கேட்கும் கேள்வி, இவ்வளவும் சொன்னதற்குப் பிறகு எப்பிடி ஓம் என்று சொன்னனியள் என்று. அம்மாவின் புன்னகையுடன் கூடிய ஒரே பதில் "அவர் நல்லவரென எனக்குத் தெரிந்திருந்தது." :)

அப்பாவிற்கு தேவையற்றவையில் நேரம் வீணாக்குவது பிடிக்காத விடயம். சமையலுக்குக் கூட எவ்வளவு குறைய நேரம் எடுக்கேலுமோ அவ்வளவே எடுக்க வேண்டும். சமைத்த சாப்பாடு விருப்பமில்லை என்று நாம் சாப்பிடாவிட்டால் அப்பா எப்போதும் சொல்வது "நீ சாப்பிடவதற்காக வாழ்கிறாயா வாழ்வதற்காக சாப்பிடுகிறாயா, நான் வாழ்வதற்குத் தான் சாப்பிடுகிறேன்", என்பார். எனக்குச் சமைக்க மிகப் பிடிக்கும். நான் தற்சமயம் கொஞ்சம் கூடுதல் நேரம் சமையலறையில் இருந்தால் கூட, "உருப்படியாகச் செய்வதற்கு உங்களுக்கு வேற‌ ஒன்றுமே இல்லையா", என்பார்.

எனக்கு ஒரு நான்கு அல்லது ஜந்து வயதிருக்கும். யாருடையதோ வீட்டிற்கு சென்றபோது அவர்கள் எனக்கு நகச் சாயம் பூசிவிட்டிருந்தனர். வீட்டில் அப்பா அதைப் பார்த்து விட்டு என்னைக் கூப்பிட்டு, " இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா" என்று கேட்டார். ஜந்து வயதுப் பிள்ளை என்ன சொல்லும்? ஓம் என்றேன். அதற்கு அப்பா, " சரி, உலகத்தில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் உங்களுக்கு நகப் பூச்சு வாங்கித் தருகின்றேன். பூசிக்கொள்ளுங்கள், ஆனால் அதற்குப் பின் என்னை அப்பா எனக் கூப்பிடக் கூடாது" என்றார். :) அம்மா, " இந்த வயதில் அவளுக்கு என்ன விளங்குமென இப்பிடிச் சொல்லுறியள்" என்றது மட்டும் நினைவில் உள்ளது. அதன் பின் அடுத்த 15 வருடங்களுக்கு எனக்கு நகச்சாயங்களைத் தொடவே பயம். :) ஒரிரு தடவைகள் மற்றையவர் வீடுகளில் அடித்துப் பார்த்து விட்டு உடனே அழித்திருக்கின்றேன். I sincerely believed appa was going to disown me.
பல சமயம் வெளியில் போகும் போது, அப்பாவிடம் வேறு ஒரு உடை உடுத்துங்கள் என்றாலோ வேறேதாவது மாற்றங்கள் சொன்னாலோ, அவரது ஒரே பதில், "நான் இப்படித் தான் வருவேன். உங்களுக்கு என்னுடன் வர வெட்கமாக இருந்தால் நான் உங்கள் அப்பா என்று யாரிடமும் சொல்லத் தேவையில்லை, வேலைக்காரனென்றே சொல்லலாம்". :) (அம்மாவும் இதே பதில் சொல்லுவா). ஒரு உடை கிழிந்து கடைசியில் போடவே முடியாதெனும் வரையிலும் போடுவார். Reduce, Reuse, Recycle என்றால் என்ன என்று எமக்குத் தெரிய முதலே அப்பாவிடமிருந்து பழகியாச்சு. மாம்பழத்தோல், நாம் சாப்பிட்ட மீதி, மிஞ்சிய பழைய சாப்பாடு என்று எமது அம்மாவும் அப்பாவும் கிட்டத்தட்ட குப்பைத் தொட்டிகளுக்கே ஒப்பிடலாம். தேங்காய்ப் பால் பிழிந்ததும் விடுபடும் தேங்காய்ப் பூவைக் கூட  எறிய வேண்டாம் என்பார்.

He was obsessed with education. கல்விதான் எமது நிரந்தர சொத்து, அதுவே உங்களைக்குக் கடைசி வரையும் உதவும் என்பார். நாம் இருந்த வீடு முற்றுமுழுதாக இந்தியன் ஆமியால் எரிக்கப்பட்ட பின்னர், யாழ் இருக்கப் போனோம். அங்கு இருக்கப் போன‌ காரணம் தன் பிள்ளைகள் நடந்து யாழ் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வசதியாக இருக்கும் என்று சொன்ன போது, அவரின் மூத்த மகளான எனக்கு வயது 10. நாம் நியூசிலாந்திற்கு வந்த பின் அம்மாவிற்கே தெரியாமல் அம்மாவை Auckland University இல் masters செய்ய enrol பண்ணி, அம்மாவிற்கு approve பண்ணி ID card வந்ததும் மிக மிகச் சந்தோசப்பட்டார்.
அவரின் பிறந்து வளர்ந்த ஊரான சாவகச்சேரியை மிக மிகப் பிடிக்கும். இங்கு கூட citizenship எடுக்கவில்லை. ஏனெனக் கேட்டால், "நாம் இவளவை தங்கட காலில் நிற்கும் மட்டும் தான் இங்கே இருப்பன். பிறகு நான் ஊருக்குப் போய் விவசாயம் செய்யப்போறன்" என்பார். அவரின் ஆசை நிறைவேறவேயில்லை. :(

தன் துறையில் மட்டுமல்லாது பல துறைகளைப் பற்றித் தெரிந்தவர். தான் பார்க்கும் எல்லோரிடமும் தன்னிடம் வரும் எல்லோரிடமும் முடிந்தளவு படியுங்கோ, அத‌ற்கு எந்த உதவியும் செய்வேன் என்றே கூறுவார்.

தனக்கு எது சரி என்று பட்டதோ அதையே செய்யும் தைரியமுடையவர். சமூகம் சொல்கிறதென்பதற்காக எதையும் செய்யவில்லை. நாம் பிறந்த நாளிலிருந்து எமக்காகவே வாழ்ந்தவர். அப்பாவிற்கு நன்றிக்கடன் ஒரு நாளும் செலுத்தி முடியாது. I will give anything to have him here with us. சாத்தியமற்றது எனத் தெரிந்த போதும் எனக்கு என்ன பிள்ளை பிறக்கப் போகிறது எனத் தெரிவதற்கு முன்பே பலர் உங்கட அப்பா தானே வரப்போறார் என்ற போதும், அப்பாவின் ஒரு நண்பர் என் மகனை அப்பாவின் பெயர் சொல்லிக் கூப்பிடும் போதும் எனது மச்சாள் அப்பாவைக் கூப்பிடுவது போன்றே என் மகனையும் அத்தை மாமா என்று சொல்லும் போதும் அப்பாவை மாதிரியே அவன் இரு கைகளையும் பின்னுக்குக் கட்டிக் கொண்டு நிற்கும் போதும் இரு கைகளையும் சமமாகப் பாவிக்கும் போதும் (ambidextrous) மகிழ்ச்சியாக‌ இருக்கும்.
 
தந்தையர் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!