Monday, January 30, 2012

முதற் பிரசவக் கதை - இறுதிப்ப‌குதி

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

19 ஆம் திகதி ஆவணி 2008 காலை 11.17 க்கு ஒரு மாதிரி குழந்தையைப் பாதுகாப்பாக வேளியேற்றியாயிற்று.
அதன் பின் பனிக்குடத்தையும் வேளியேற்றி, பிரிஞ்சதெல்லாம் தைச்சு, இரத்தம் ஏற்றி என்று என்னையும் ஒரு வழி பண்ணி maternity ward இல் கொண்டு போய் விட பின்னேரம் ஆகிவிட்டது.

Saturday, January 28, 2012

Women entrepreneurs, example not exception

Thursday, January 26, 2012

முதற் பிரசவக் கதை - 2


வலி கொஞ்சம் கொஞ்சமாகக் கூட ஆரம்பித்தது. இன்னும் சவ்வு உடையவில்லை. இன்னொரு தடவை சோதனை செய்து பார்த்து கருப்பை வாய் கிட்டத்தட்ட 4 cm விரிவடைந்து விட்டதென midwife சொன்னார். அதன் பின் assessment unit இலிருந்து delivery unit க்குச் செல்லம் என்றனர். சரியென நடந்து அங்கு சென்றோம். சிலருக்கு தண்ணீரில் இருந்து பிள்ளை பெறுவது சில வேளைகளில் இலகுவாக இருப்பதால் Delivery unit இல் சில அறைகளில் bath tub இருக்கும். அவ்வாறு bath tub இருக்கும் அறை ஏதாவது யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் அங்கே விடும் படி முதலே கேட்டிருந்தேன். அதுவும் சுடுநீரில் இருந்தால் கொஞ்சம் வலியின் உணர்வு குறையும் என்பதாலேயே. அப்படி ஒரு அறை இருந்ததால் அங்கேயே என்னை விட்டனர்.

Tuesday, January 24, 2012

முதற் பிரசவக் கதை - 1

தற்போதைய பிரசவத்திற்குத் தரப்பட்ட நாளிற்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு கிழமைகளே இருக்கிறது. இந்நிலையில் முதல் பிரசவம் எப்படி நடந்ததென்பதை எழுதத்தோன்றியது, அதனால் இந்தப்பதிவு.

Monday, January 23, 2012

ஒரு திறந்த கடிதம்

அன்பின் சக சமூகத்தவற்கு,

இவ்விடயங்களை பல தடவைகள் சொல்ல வேண்டுமென நினைத்துள்ளேன். ஆனால் எப்படிச் சொல்வதென்று தெரியாமல் சொல்லவில்லை. நான் ஒரளவு நெருங்கிப் பழகும் சிலரிடம் சொல்லியும் உள்ளேன், ஆனால் அதனால் எதுவும் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை. அதனால் எனது எண்ணங்களை/கோபத்தை இங்கு கொட்டித்தீர்க்கலாம் என்ற முடிவால் இந்தக் கடிதம்.

Tuesday, January 17, 2012

சின்னஞ் சிறிய வயதில் பெரிய பெரிய சிந்தனைகள்


Arfa Karim Randhawa, 9 வயதில் உலகின் மிக இளமையான Microsoft Certified Professional ஆனவள். பாக்கிஸ்தானைச் சேர்ந்தவள். அவளின் 16 வயதில் சில தினங்களுக்கு முன் காலமாகிவிட்டாள்.:(

Todd Bishop என்பவர் இவளின் பத்து வயதில், Bill Gates ஜச் சந்தித்ததைப்பற்றி தான் எடுத்த நேர்காணல்களைத் தொகுத்து இங்கு கொடுத்துள்ளார். நான்கே நிமிடங்கள் தான், கேட்டுப்பாருங்கள்.

Sunday, January 15, 2012

போலியோ இல்லாமல் ஓராண்டு - A cautious celebration - ஆனாலும் நிச்சயம் கொண்டாடப்படவேண்டிய விடயமே

முதன் முதலாக இந்தியாவில் இம்மாதம் 13ஆம் திகதி வரை கடந்த ஒரு வருடத்தில் புதிதாகப் போலியோ வைர‌ஸ் எவரையும் தாக்கவில்லை. கடந்த 13ஆம் திகதியிலிருந்து இந்தியாவில் போலியோ ஒரு endemic (திணையின முறைநோய்? இந்தச் சொல் சரியா எனத் தெரியவில்லை) நோய் அல்ல. கடந்த சில காலங்களாக இந்தியா, பாக்கிஸ்தான். ஆவ்கானிஸ்தான், நையீரியா ஆகிய நான்கு நாடுகளிலும் இந்நோய் மிகக் கூடுதலாகப் பரவிக்கொண்டிருந்தது. இவ்வருடத்திலிருந்து இந்தியா இந்த list இல் இல்லை. It's an amazing achievement. இந்நோயை முற்றாக அழிப்பதற்கான பாதையில் பல படிகள் முன்னேறியுள்ளோம்.

Thursday, January 12, 2012

2011 கூகிள் அறிவியல் காட்சி விழாவில் வெற்றி பெற்ற மூன்று பதின்மவயதினரின் பேச்சு



Aren't they amazing?

Wednesday, January 11, 2012

கருத்தடை மாத்திரைகள் - Neither poison nor one size fits all

TIme Magazine cover - April 1967

பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளின் பாவனை முதன் முதலாக 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டது. அன்றே முதன் முதலாகத் திட்டமிட்ட பிள்ளை வளர்ப்பும் (planned parenthood) பெண்களால் தமக்கு எப்போ பிள்ளை பிறக்க வேண்டுமென்பதைத் தாமே கட்டுப்படுத்துவதும் சாத்தியமானது. இந்த இரண்டாவது
காரணத்திற்காகவே இன்னும் பல கலாச்சாரங்களிலும் சமயங்களிலும் இம்மாத்திரை பயன்படுத்துவது வரவேற்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, முற்றாகத் தடை கூடச் செய்யப்படுகிறது. அதே நேரம் மற்றைய எதிர் முனையில் சிறிதும் மருத்துவர்களுடன் கலந்துரையாடாமல் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டவாறு இனப்பெருக்க வயதில் இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் சில சமயம் கொடுக்கப்படுகிறது. இரண்டுமே மூட நம்பிக்கைகளின் உச்சக் கட்டங்கள். வ‌ர‌லாற்றையும் ச‌மூக‌, க‌லாச்சார நோக்குக‌ளையும் மேலும் அல‌ச‌ முன் இம்மாத்திரைக‌ளுக்குப் பின்னாலிருக்கும் அறிவிய‌லையும் அவை எவ்வாறு வேலை செய்கின்ற‌ன‌ என‌வும் பார்ப்போமா? இம்மாத்திரைகளே இன்று கருக்கட்டலைத் தடுப்பதற்கு உலகில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். 50 வருடங்களில் இந்த மாத்திரை பல பல ஆய்வுகளுக்கும் அதனூடாக பல திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டு இன்று உபயோகத்திலுள்ள மாத்திரைகள் உருவாக்கப்பட்டன.

எம்மிடம் இருக்கும் அனைத்து கிருமியொடுக்கிகளுக்கும் எதிர்ப்பாற்றல் மிக்க புதிய காசநோய் பாக்டீரியா

காசநோய் (Tuberculosis (TB)) ஒரு தொற்று நோய்.Mycobacterium tuberculosis எனும் பாக்டீரியாவே இந்நோய்க்குக் காரணம். இந்த பாக்டீரியா உள்ள எவரும் இருமும் போதோ தும்மும் போதோ வெளியேறும் காற்றுத் துளிகளைச் சுவாசிப்பதன் மூலம் இது மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்த‌ பாக்டீரியாவால் நுரையிர‌ல் பாதிப்புற்றோரே ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு இதைப் ப‌ர‌ப்ப‌க்கூடிய‌வ‌ர்க‌ள். இந்த பாக்டீரியா உள்ள ஒருவர் சராசரியாக 10-15 பேருக்கு இந்நுண்ணுயிரியைப் பரப்பலாம்.வயோதிபர், குழந்தைகள், உடலின் immune system வலிமையற்றவர்கள், போதிய போசாக்குள்ள உணவு கிடைக்கப்பறாதவர்கள், மிகச் சனத்தொகை கூடிய பகுதியில் வாழ்வோர் ஆகியோரை இந்நோய் கூடுதலாகப் பாதிக்கின்றது. உலகில் தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் உள்ள மக்களை இந்நோய் மிகக்கூடுதலாகப் பாதிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் மட்டும் 1.7 மில்லியன் மக்கள் இந்நோய்க்குப் பலியாகி உள்ளனர்.

இந்நோய்க்குக் காரணமான பாக்டீரியா சிலரில் இருந்தாலும், அவர்களுக்கு காசநோய் வரப் பல மாதங்களோ, சில சமயம் வருடங்களோ ஆகலாம். அவருக்குத் தெரியாமலே அவர் பலருக்கு இந்த பாக்டீரியாவைப் பரப்பும் சாத்தியமும் உண்டு.உலகில் தற்சமயம் மூன்றில் ஒருவரில் இந்த பாக்டீரியா உள்ளது.

Tuesday, January 3, 2012

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?